districts

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம்

மதுரை,ஏப்.29-  மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக  எம்.பி,யும் இந்திய மல்யுத்த  சம்மேள னத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்  பாஜக எம்.பி. க்கு எதிராக போராடும் மல்யுத்த வீராங்க னைகளுக்கு  ஆதரவு தெரிவித்தும் அனைத்து சங்கங்கள் சார்பில் ஏப்ரல் 29 அன்று மதுரை திருநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம்  இந்திய மாணவர் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொ ழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புக ளின் மதுரை மாநகர் -புறநகர் மாவட்டக் குழுக்கள்  சார்பில் திருநகரில்  நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க புறநகர் மாவட்ட பொருளாளர் என்.விஜயா தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.சசிகலா பேசினார். மாதர் சங்க மாநகர் மாவட்டச் செய லாளர் வை.ஜென்னியம்மாள், புறநகர் மாவட்டத் தலைவர் மலர்விழி, விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன்,  விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் வி.உமாமகேஸ்வரன்,  சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின், வாலிபர் சங்க புறநகர்  மாவட்ட செயலாளர் க.தமிழரசன், மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வா, மாண வர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் க.பிருந்தா, மாநகர் மாவட்டச் செய லாளர் பாலா,ஆகியோர் பேசினர். நிறைவுசெய்து மாதர் சங்க மாவட்ட நிர்வாகி செ.முத்துராணி பேசினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் மகாலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.