districts

img

திரிபுரா சிபிஎம் ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், மார்ச் 22- திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யர்கள் மீதான பாஜகவின ரின் கொலை வெறி தாக்கு தலை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத மற்றும் விவசாயி களின் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வெட்டி சுருக்கியதை கண்டி த்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சிப்புளி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் பி.கல்யாணசுந்தரம் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குரு வேல், இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.