விருதுநகர், ஏப்.11- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தின் கீழ் நீர்நிலைகளைப் மேம்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் வளர்ப்பு, தோட்டக்கலை, பண்ணை குட்டைகள் ஏற்படுத்துதல், பட்டு வளர்ப்பு, தரிசு நிலங் கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. இத்திட்டத்தில் சிறப் பாக செயல்டும் மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசு சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப் பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் விரு திற்கு விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒன்றி யத்தை சேர்ந்த கோட்டை பட்டி, படிக்காசுவைத்தான் பட்டி ஆகிய இரு ஊராட்சி கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கான விருதை கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சித் தலைவர் முரு கேசன் ஆகியோர் தில்லி யில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனிடமிருந்து விருது மற்றும் சான்றித ழைப் பெற்றனர்.