districts

திடீரென மூடப்படும் தனியார் நர்சரி பள்ளி இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் பாதிப்பு

மதுரை, ஜூன் 9-  மதுரை விஸ்வநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தனியாக சுயநிதி அடிப்படை யில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி  நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டின்கீழ் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரு கின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்  றோர்களை சில நாள்களுக்கு முன்பு  தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தி னர், நர்சரி பள்ளி மூடப்பட உள்ள தால் குழந்தைகளின் கல்விச்சான்றி தழ்களை உடனடியாக பெற்றுச்செல் லுமாறு தெரிவித்துள்ளனர்.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்  றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வா கத்திடம் கேட்டபோது முறையான  பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மூடப்படுவதால் அங்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக கல்வி பயின்று வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி  பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறு கையில், பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டாயக்கல்வி உரி மைச்சட்ட ஒதுக்கீட்டின் கீழ் படித்து  வருகின்றனர். தற்போது பள்ளி  மூடப்படுவதாக நிர்வாகம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக பெற் றோருக்கு எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பள்ளி மூடப்  பட்டால் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களை வேறு தனியார் பள்ளிகள் எதுவும் ஏற்  றுக்கொள்ளாது. அங்கு முழுக்கட்ட ணம் செலுத்தினால்தான் சேர்த்துக் கொள்வார்கள். தனியார் பள்ளிகளில் கணிசமான தொகையை கட்டணமாக செலுத்த வழியில்லாததால்தான் கட்டா யக்கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீட்டில் குழந்தைகள் பயில்கின்றனர். தற்போது பள்ளி மூடப்படுவதால் அதற்கும் வழி யில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏழைக்குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்  கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி னர். இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் கே.கார்த்திகாவிடம் கேட்டபோது, நர்சரி பள்ளியை மூடு வதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் அந்தப்பள்ளியின் நிர்வாகம் நடத்தும் மற்றொரு பள்ளியில் மாணவர்களுக்கு அனுமதியளிப்பதாகவும் தெரிவித்துள் ளது என்றார்.  இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்,  வேல்தேவா  கூறுகையில், பள்ளியை  தொடர்ந்து நடத்துவதற்கு பள்ளி நிர்வாகமும் மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். அல்லது இப் பள்ளியின்  மேல்நிலைப் பள்ளி கட்டிடம் அருகில் உள்ளது அதனுடன் இணைத்து நடத் திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.