districts

img

காளையார்கோவிலில் தொடக்கப் பள்ளி முப்பெரும் விழா

சிவகங்கை, ஏப்.15- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊரா ட்சி ஒன்றிய கிழக்கு தொடக் கப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது.  புதிய ஐந்து வகுப்பறை கள் கட்டிட திறப்பு விழா, விளையாட்டு விழா பள்ளி மாணவர்களின் தனித் திறன் களை வெளிப்படுத்தும் 115 வது ஆண்டு விழா, டாக்டர்  ஏபிஜே அப்துல் கலாம் கலை யரங்கு திறப்பு விழா ஆகி யவை ஏப்ரல்  15  சனிக்கிழ மையன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள்  நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன்  மேம்பாட்டு நிதி யில் ரூ35லட்சத்தில் கட்டப் பட்ட கலையரங்கை திறந்து வைத்து உரையாற்றினார். இவ்விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன்ரெட்டி தலைமை வகித்து பேசினார். கூட்டு றவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சிவ கங்கை சட்டமன்ற உறுப்பி னர் பி. ஆர் .செந்தில்நாதன், அம்மையப்பர் குரூப்ஸ் பி.ராஜ சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி, வட்டார கல்வி அலுவலர்  ஜேம்ஸ், காளையார் கோயில் ஊராட்சி மன்றத்  தலைவிஜோஸ்பின்மேரி, காளையார்கோயில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்  சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ்அமல நாதன் உள்பட பலர் பங்கேற்  றனர். பள்ளி மாணவ, மாண விகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.