மதுரை, ஆக.3- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 40 ஆம் ஆண்டு ஸ்தாபன தினம் மதுரை மாவட்ட கிளை அலுவல கத்தில் புதனன்று நடைபெற்றது. மாநகர் கிளை தலைவர் காந்திபாய் சுவாமி யடியாள் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஜோசப் ஜெயசீலன் வர வேற்றார் . கிளைத் தலைவர் சித்ரா அமைப்பு கொடியினை ஏற்றினார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உரை யாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். கிளைப் பொரு ளாளர் ரமேஷ் சந்திரன், நிர்வாகி சுப்பு லட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.