districts

img

கூலி உயர்வு கோரி சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

 இராஜபாளையம், மே 26- விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும்  விசைத்தறி கூடங்களில் வேலை  பார்க்கும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல் படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர். சத்திரப்பட்டி மருத்துவத்துணி உற்பத்தியாளர் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தொழிற்சங்க தலைவர் பழனி வேல் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகி சோமசுந்தரம், முனியாண்டி, ஏஐடியுசி நிர்வாகி ஆர்.பி. முத்துமாரி, தேமுதிக பொன்னுச்சாமி உட்பட விசைத்தறி தொழிலாளர்கள் ஏரா ளமானோர் கலந்துகொண்டனர்.