districts

img

ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சிபிஎம் சார்பில் போராட்டம் அறிவிப்பு

மதுரை, செப்.14- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றி யம் வடக்கு காலனி பகுதியில் வசிக்கும்  ஆதி திராவிட மக்களின் நீண்ட நாள்  கோரிக்கைகளான சாக்கடை, தெரு  விளக்கு, குழியில் தொட்டி, குடி தண்ணீர், சமுதாய கூடம், சுடுகாட்டிற்கு சாலை வசதி, எரியூட்டும் மேடை அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செல் லம்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளைகள் சார்பில் வெள்ளியன்று செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு சாலை மறியல் போராட்  டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்  டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொறி யாளர் மற்றும் அலுவலர்கள் ஆகி யோர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி செயலா ளர் வி.பி.முருகன் மற்றும் பொதுமக் கள் அனைவரும் முன்னிலையில் வியா ழனன்று சமாதானக் கூட்டம் நடை பெற்றது.  பேச்சுவார்த்தையில், செல்லம் பட்டி ஆதி திராவிடர் மயானத்திற்கு தார்ச்சாலை வசதி, எரியூட்டும் மேடை,  கழிவு நீர் வாய்க்கால், சமுதாயக் கூடம், குடிநீர் வசதி, குளியல் தொட்டி  ஆகியவற்றை நிறைவேற்றி தருவதாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.  பேச்சுவார்த்தையில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினர் சீ.குருசாமி, டி.சிவ னம்மாள், ஏ.கணேசன், கிளைச் செய லாளர்கள் எஸ்.கருணாகரன், ஆர்.மங்கையர்கரசி, பி.ஜெயராணி, எம்.சடையம்மாள் ஆகியோர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.