கோவை, பிப்.19- தபால் நிலையங்களை மூடும் நோக் கத்தில் கொண்டு வரப்பட்ட ஐடிசி திட் டத்தை கைவிட வேண்டும், என வலியு றுத்தி அஞ்சல் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘சுதந்திரமான தபால் பட்டுவாடா மையம்’ என்ற பெயரில் கிளை தபால் நிலையங்கள் மற்றும் இணை தபால் நிலையங்களை மூடும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட ஐடிசி திட்டத்தை கைவிட வேண்டும். எதிர்காலத்தில் தபால் துறையில் ஊழியர்களின் எண் ணிக்கை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ஐடிசி, இயந்தி ரமயமாக்கப்பட்ட பீட் (IDC, MECHANIZED BEAT) போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏஐபிஇயூ - பி3 மற்றும் என்இபிஇ சம்மேளனம் மீதான அங்கீகார ரத்து உத்தரவை திரும்பப் பெற வேண்டும். அஞ்சல் ஆர்எம்எஸ் அலுவலகம் மூடுவதை கைவிட வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை மீண் டும் அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் ஊழி யர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தலைமை தபால் நிலையத்தில் செவ்வாயன்று நடைபெற்ற போராட்டத்தில், சங்கத் தின் கோவை கோட்டச் செயலாளர் எஸ்.செந்தில்குமார், உதவிச்செய லாளர் பாலமுரளி கிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பொள்ளாச்சி கோட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோட்ட நிர்வாகிகள் எம்.பகவதி, பி.கார்த்தி கேயன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.