districts

திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக் கணித்திருந்த நிலை யில், தமிழ்நாடு திறந்த  நிலை பல்கலை பட்ட மளிப்பு விழாவையும் புறக்கணித்தார்.

விடுதலை போராட்ட வீரர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த   தலைவர் என். சங்கரய் யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளு நர் ஒப்புதல் அளிக்க வில்லை. இதனை யடுத்து மதுரை காம ராஜர் பல்கலை பட்ட மளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி புறக்கணித்தார்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட் டையில் நடக்கும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு  விழாவையும் பொன் முடி புறக்கணித்தார். அழைப்பிதழில் அவரது பெயர் இடம் பெற்று இருந்தும் கலந்து கொள்ள வில்லை. உயர்கல்வித் துறை செயலாளரும் கலந்து கொள்ள வில்லை.