districts

img

தேனி அருகே காவல் நிலையம் முற்றுகை

தேனி, மே 12-  தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டியில் கடந்த  வாரம் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் வேடிக்கைப்  பார்த்து கொண்டிருந்த போது விக்னேஷ் மற்றும் வினோத் குமார் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் தாக்கியுள்ளனர். தட்டிக் கேட்கச் சென்ற விக்னேஷின் தாயாரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து பழனி செட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை இல்லை. இதனால் தன்னெழுச்சியாகத் திரண்ட கிராம மக்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். சார்பு ஆய்வாளர் பாக்கியம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.