சாலை வசதி கேட்டு பரளியில் மறியல்
நத்தம், மே 15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி டோல்கேட் பகுதியில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பொடுகம்பட்டி கிராமம். பரளி டோல்கேட் பகுதியில் இருந்து இந்த கிராமத்திற்குச் செல்ல சாலைவசதி இல்லை. இது குறித்து நான்குவழிச்சாலை நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் சாலை வசதி செய்து தரவில்லை. இதனால் தன்னெழுச்சியாகத் திரண்ட கிராம மக்கள் சாலை வசதி கேட்டு மதுரை - நத்தம் நான்குவழிச்சாலையில் பரளி- டோல்கேட் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரளிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளைத்தாய் மற்றும் காவல்துறையினர் இருபது நாட்களுக்குள் சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இருசக்கர வாகனங்கள் மோதல் : ஒருவர் பலி
நத்தம், மே 16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள குட்டுப்பட்டி பெரியமலையூரை சேர்ந்தவர் பெரியசாமி (35). இவர் திங்களன்று தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி மெய்குரு(36) என்பவர் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் பெரியசாமி வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த பெரியசாமிக்கு சித்ரா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
முகவூரில் அன்னையர் தினம்
விருதுநகர், மே 15- இராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் வாலிபர் சங்கம்- ஜனநாயக மாதர் சங்கம்- தையல் சங்கம் இணைந்து அன்னையர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றி யச்செயலாளர் சந்தனகுமார், வாலிபர் சங்க ஒன்றி யச்செயலாளர் பரமேஸ்வரன், பரந்தாமன், சித்ரா, மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் பொன்னுத்தாய், தையல் சங்க மாவட்டப் பொருளாளர் பானுப்பிரியா, சுமதி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க கிளைத் தலைவர் பேச்சியம்மாள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மணக்காட்டூர் அருகே பேருந்து-வேன் மோதல்
நத்தம், மே 15- திண்டுக்கல்லில் இருந்து செந்துறைக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை செந்துறையை சேர்ந்த ஆறுமுகம் ஒட்டி வந்தார். நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர்-மேற்கிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது தனியார் பேருந்தின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய பேருந்து எதிரே வந்த பால் ஏற்றிவந்த வேன் மீது மோதி தொடர்ந்து அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் மினி வேன் ஓட்டுநருக்க ரஞ்சித்குமார் காயமடைந்தார். பேருந்தில் சென்ற பயணிகள் யாருக்கும் காயமில்லை.
இருசக்கர வாகனங்கள் மோதல் : ஒருவர் பலி
நத்தம், மே 16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள குட்டுப்பட்டி பெரியமலையூரை சேர்ந்தவர் பெரியசாமி (35). இவர் திங்களன்று தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி மெய்குரு(36) என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் பெரியசாமி வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த பெரியசாமிக்கு சித்ரா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
மதுரையில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை
மதுரை, மே 15- மதுரை பாலமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சரந்தாங்கியைச் சேர்ந்த மாணவரும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாணவியும் 2022-2023-ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தேர்வில் இருவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஞாயிறன்று மாணவர் சரந்தாங்கியில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாணவி சிறிது நேரத்தில் சேந்தமங்கலத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே தற்கொலை செய்துகொண்டார். பால மேடு காவல்துறையினர் விசாரித்தனர். இவர்கள் இருவ ரும் திருமண வயதை எட்டாத நிலையில் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென மாணவர் தனது தாயை வற்புறுத்தியுள்ளார். திருமண வயதை அடைந்த பின்புதான் திருமணம் செய்து வைப்பேன் என தாய் கூறியதை ஏற்க மறுத்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியும் உயிரை மாய்த்துக் கொண்டார்.
குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
கடமலைக்குண்டு, மே 15- தேனி மாவட்டம் வருஷநாடு ஊராட்சிக்குட்பட்ட தர்மராஜபுரம், வைகைநகர், வருஷநாடு பகுதிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பது, பெண் குழந்தைகளின் உரிமையைப் காப்பது குறித்து சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தலைமை வகித்தார். தேனி மாவட்ட குழந்தைகள் கண்காணிப்பு அலுவலர் இப்ராஹிம், வைகை மகளிர் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளா கூறுகையில், “மயிலாடும்பாறை ஒன்றியத்தில் குழந்தைத் திருமணம் சில இடங்களில் நடந்து வருகிறது. குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதோ, முயற்சி செய்வதோ சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்” என்றார்.
வீரபாண்டியில் பக்தர்களிடம் பணம் பறிப்பு; நான்கு பேர் கைது
தேனி ,மே 5- தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் விழாவிற்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி பக்தர்களிடம் நகை, பணத்தை திருடர்கள் பறித்து வருகிறார்கள் . இந்த நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (42) என்பவரிடம் வழிப்பறி செய்த கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (40), தாடிச்சேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜிடம் பணம் பறித்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாரியப்பன் (59), திருப்பூர் சிவசாமியிடம் பணம் திருடிய கம்பம் எஸ்.டி.கே. நகரைச் சேர்ந்த அஜித்குமார் (24), கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த குமரேசனிடம் பணம் பறித்த கம்பம் ஜவுளிக்கடை வீதியைச் சேர்ந்த நாகராஜன் (29) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆலங்குடி அருகே நீரில் மூழ்கி 3 பேர் இறப்பு
புதுக்கோட்டை, மே.15- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திங்கள்கிழமை இரண்டு சிறுமிகள், அவரது சித்தப்பா என மூன்றுபேர் ஊரணியில் மூழ்கி உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு அட்சையா(15), தனலட்சுமி (12), பூமிகா (10) என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களது குலதெய்வம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் உள்ளது. குலதெய்வம் கோவில் கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு விஜயகாந்த் அவரது மனைவி விஜயா விஜயகாந்தின் சகோதரரான ஊட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (29), விஜயகாந்தின் மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு பேர் திங்கள்கிழமை பள்ளத்தி விடுதிக்கு வந்துள்ளனர். கோவில் ஊரணியில் சிறுமிகள் அட்சையா (15), தனலட்சுமி (12) ஆகிய இருவர் குளித்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களை மீட்க சிறுமிகளின் சித்தப்பா ஊட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (29) முயன்றுள்ளார் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். மூழ்கிய மூன்று பேரையும் சடலங்கலாக கிராமத்தினர் மீட்டனர். ஆலங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொலைந்த, திருடுபோன செல்போனை கண்டுபிடிக்க புதிய இணையதளம்
மதுரை, மே 15- தொலைந்த அல்லது திருட்டு போன மொபைல் போனை கண்டறிய உதவும், புதிய இணையதளத்தை ஒன்றிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மே 17-ஆம் தேதி உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் www.sancharsaathi.gov.in என்ற புதிய இணையதள சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்களன்று இந்த இணைய தளத்தை ஆய்வு செய்தபோது தொலைந்த அல்லது திருடப்பட்ட 4,79,511 செல்போன்களின் சேவை “பிளாக்” (தடுக்கப்பட்டுள்ளதாகவும்)செய்யப்பட்டுள்ளதாகவும் 2,43,404 செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் CEIR என்ற பகுதி தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்க ளைக் கண்டறிய உதவுகிறது. தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களை அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கில் தடுக்க வும் இது உதவுகிறது, இதனால் தொலைந்த அல்லது திருடப்பட்ட சாதனங்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. தடுக்கப்பட்ட மொபைல் போனை யாரே னும் பயன்படுத்த முயன்றால், அதன் ட்ரேஸ்பிலிட்டி மூலம் கண்டறியப்படுகிறது. மொபைல் போன் கண்டு பிடிக்கப்பட்டதும் சம்மந்தப்பட்டவரின் செல்போனின் தடை நீக்கப்படும்.
சாரைப்பாம்பு பிடிபட்டது
திருவில்லிபுத்தூர்,மே 15- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் காம ராஜர் நகரில் முணியான்டி என்பவர் வீட்டில் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவ லையடுத்து திருவில்லி புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் முத்துச்செல்வம் அந்தோனி தலைமையிலான குழு முனி யாண்டி இல்லத்திற்குச் சென்று பாம்பை உயிருடன் பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர். (ந.நி.)
காந்தி கிராம பல்கலை.யில் மாணவர் சேர்க்கை
சின்னாளபட்டி, மே15- காந்திகிராம பல்கலைக் கழகம் 2023-24-ஆம் கல்வி ஆண்டின் சேர்க்கை குறித்த தேதியை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழ கத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டபடிப்பு களுக்கான 2023-2024 கல்வி யாண்டுக்கான சேர்க்கை CUET (Common Univer sity Entrance Test) பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடை பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பல்கலைக்கழத்தின் பிற படிப்புகளுக்கான (PG Diploma, B.Voc, Diploma, D.Voc and Certificate Pro gramme) சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் பல்கலைக்கழக இணைய தளம் www.ruraluniv.ac.in வழியாகச் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளிகள்: காவல்துறை அறிவிப்பு
மதுரை. மே 15- திண்டுக்கல் மாவட்டம் மோர்பட்டி அருகே உள்ள கோப்பம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் செட்டியார் மகன் பி.கருப்பையா (27). இவர் மீது மதுரை சுப்பிரமணிய புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சென்னை, எம்.ஏ.கார்டன் தேனாம்பேட்டை, பிள்ளை யார் கோவில் ரோட்டைச் சேர்ந்த வரதய்ய நாயுடு மகன் வி.ரெங்கராஜ் (49). இவர் மீது மதுரை சுப்பிர மணியபுரம் காவல் நிலை யத்தில் வழக்குகள் நிலுவை யில் உள்ளது. திருப்பரங்குன்றம், சந்திராபாளையம் மூன்றா வது தெருவைச் சேர்ந்த முஹமது அலி ஜின்னா மகன் எம்.காஜாமைதீன் (27). இவர் மீது மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தர வுக்குக் கட்டுப்பட்டு வாய்தா விற்கு ஆஜராகவில்லை. இவர்கள் மூவரும் தேடப்படும் குற்றவாளிக ளாக அறிவிக்கப்பட்டுள் ளனர். மூன்று பேரும் உட னடியாக மதுரை நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் விபத்து 21 பேர் காயம்; ஒருவர் பலி
பழனி, மே 15- கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஒருவர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். பின்னர் பழனி கோவிலுக்குப் புறப்பட்டனர். அவர்களது வேன் பழனி மலைச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மன்னார்குடியைச் சேர்ந்த முகேஸ்வரன் (15), திவ்யா (29), தன்சிகா (4), கவுரி (18), காயத்ரி (21), பாரதி செல்வன் (15), ஓட்டுநர் இளம்பரிதி (25) உட்பட 21 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.