districts

img

அனைவருக்கும் வீடு வழங்கக் கோரி மனுக் கொடுக்கும் போராட்டம்

நரிக்குடி, டிச.19- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிரா மங்களிலும் வாடகை வீடு, சேதமடைந்த வீடுகள், குடிசை வீடு, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் குடியிருப்போரை முறையாக கணக்கீடு செய்து  அனைவருக்கும் வீடு வழங் கும் திட்டத்தின் கீழ் வீடுகள்  வழங்க வேண்டும் என மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நரிக்குடி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் கே.முனிய சாமி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் மார் கண்டேயன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. முருகன் இந்தியதேசிய லீக் கட்சியின் அயூப்கான், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்  வாகிகள் சுரேஷ்குமார், பாலு, பெருமாள், குமரேசன் ஆகியோர் உட்பட பலர்  பங்கேற்றனர். போராட் டத்தைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது.