districts

img

குடியிருப்பு அருகே தேங்கிக்கிடக்கும் மழைநீரை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகர், நவ.22- விருதுநகர் அருகே சூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட முனிகீர் நகர் பகுதி யில் பல நாட்களாக தேங்கி கிடக்கும் மழை  நீரை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சி யரிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அம்மனுவில் கூறிய தாவது: சூலக்கரை மேட்டுப் பகுதியில் தனி யார் திருமண மண்டபம் அருகே உள்ளது  முனிகீர் நகர். இங்கு ஏராளமான குடியிருப்பு கள் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் இப்பகுதியில் மழை பெய்தது. இதை யடுத்து, மழைநீரானது எங்கும் செல்லா மல் அதே பகுதியில் அப்படியே தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டுமென சூலக்கரை ஊராட்சி  மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்  தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அங்கு கொசுக்  கள் உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சிபிஎம் விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு கூறுகையில், சூலக்கரை ஊராட்  சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில்லை. அதிலும், 4 வழிச் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள பகுதி யான முனிகீர் நகர் முற்றிலும் புறக்க ணிக்கப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுரறை மனுக்  கொடுத்தும் உரிய நடவக்கை எடுக்க வில்லை. எனவே, சூலக்கரை ஊராட்சியை  விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரி வித்தார். எனவே, மாவட்ட நிர்வாகம், தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்றி முனிகீர் நக ரில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.