districts

img

திருப்பரங்குன்றம் நகரில் மக்கள் நலனை பாதுகாத்திடுக! அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

மதுரை, ஜன.27- திருப்பரங்குன்றம் நகரில் சமூக நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் நலனை  பாதுகாக்க வலியுறுத்தி திருப்பரங்குன்  றம் அனைத்துக் கட்சி சார்பில் மாவட்ட  ஆட்சியரை சந்தித்து திங்களன்று மாலை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: மதுரை மாவட்டம் திருப்பரங்குன் றம் மலை உச்சியில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டு தல மான ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹாவிற்கு இஸ்லாமிய பெருமக்களும், இதர சமூக மக்களும் சென்று வருவது வழக்  கம். மேலும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு முறையான கந்தூரி வழக் கப்படி ஆடு, கோழி காணிக்கை செலுத்தி, சமைத்து அனைத்து சமூக மக்களும் உண்டு வருவது வழக்கம். வார நாளான வியாழனன்று மனநலன் பாதிக்கப்பட்டவர்களை மலை மீதுள்ள  பள்ளிவாசலில் அழைத்து சென்று மந்தி ரித்து தங்கி வருவது தொடர்ந்து பல  ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் வழக்க மாகும்.  இந்நிலையில் கடந்த 27.11.2024 அன்றும் 25.12.2024 அன்றும் கந்தூரி செலுத்த ஆட்டுடன் வந்த இஸ்லாமிய மக்களை திருப்பரங்குன்றம் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி மலை மீதுள்ள தர்ஹாவில் மேற்படி வழி பாட்டு முறைக்கு அனுமதி இல்லை என  மறுத்துள்ளனர்.  ஆண்டாண்டு காலமாக நடை பெறும் இந்நிகழ்வை தடுக்க யார் உத்த ரவு பிறப்பித்தது என கேட்டதற்கு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வா ளர் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் திரு மங்கலம் வருவாய் கோட்டாட்சியர் இது மேலிடத்து உத்தரவு எனக் கூறி னர். உத்தரவின் நகலை தருமாறு கேட்ட தற்கு இது வாய்மொழி உத்தரவு எனக்  கூறி இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து வருகின்றனர். தங்களது வழிபாட்டு உரிமை பறி போய்விடும் என அஞ்சி ஒரு சில  இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்  களை நடத்தியுள்ளனர். மேற்படி நிகழ்வை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு திருப்பரங்குன்றம் நகரில் மத நல்லிணக்கத்தோடு அமை தியாக வாழ்ந்து வரும் மக்களின் ஒற்று மையை சீர்குலைக்க இந்துத்துவா பாஜக அமைப்பின் தலைவர்கள் தொ டர்ந்து தங்களுடன் நூற்றுக்கணக்கான ஆட்களை அழைத்து வந்து திருப்ப ரங்குன்றம் மலைக்கு சென்று கோஷங்  கள் எழுப்பி அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.  வெறுப்பு அரசியலை உருவாக்கி மத மோத லுக்கு அடித்தளமிடுகின்றனர். மேலும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள திருப்ப ரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா ஆலயத்திற்கு செல்லும் படிக்கட்டுகளை காவல்துறை யினர் அடைத்து வைத்து மக்களை செல்லவிடாமல் பெரிய தர வீதியில் அமைந்துள்ள மலைப்பாதையில் அனுமதிப்பது நகரில் மேலும் பதடற றத்தை உருவாக்க வாய்ப்பாக அமை கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில்  தலையிட்டு ஆண்டாண்டு காலமாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்ஹாவில் இஸ்லா மிய மக்களின் கந்தூரி வழிபாட்டு முறை யை தொடர்ந்து அனுமதிக்கவும், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்  துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத் திற்கு செல்லும் மலையின் பின்புறம் உள்ள பாதையை திறந்து பக்தர்கள் செல்ல அனுமதிக்கவும் ஆவன செய்யு மாறு வேண்டுகிறோம். இப்பிரச்சனை யை பயன்படுத்தி மக்களை மத ரீதி யாக பிளவுபடுத்தி மோதலுக்கும், அமைதியின்மைக்கும் வழிவகுப்ப வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.  இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயகுமார், திமுக திருப்பரங்குன்றம் பகுதிச் செய லாளர் கிருஷ்ணபாண்டியன், அதிமுக  பகுதி கழக துணைச் செயலாளர் ப. மோகன்தாஸ், இந்திய தேசிய காங்கி ரஸ் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி. மகேந்திரன், மதிமுக எஸ்.பாண்டியன், விசிக அ.முத்துமணிகண்டன், தேமு திக நெடுமாறன், திரிணாமுல் காங்கி ரஸ் பி.எஸ். சண்முகநாதன், சிபிஐ மகா முனி, மனித நேய மக்கள் கட்சி எஸ். சேக்முகமது, இந்திய யூனியன் முஸ்  லிம் லீக் மாநில செயலாளர் எம்.அபு காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.