districts

img

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி கேட்டு மனு

தருமபுரி, டிச.19- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள  சிந்தல்பாடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற் பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வேலை நேரங்களிலிலேயே மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே சுற்றுவதும், விளையாடுவதுமாக உள்ளனர். இங் குள்ள ஆசிரியர்கள் இதனை கண்காணிப்பதில்லை. மேலும், ஆசிரியர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் ஆசிரி யர்கள் பாடம் கற்பிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.  மேலும், இப்பள்ளிக்கு அடிப்படை வசதி இல்லை. குறிப் பாக குடிநீர், பள்ளி சுற்றுசுவர் ஆகியவை ஏற்படுத்தி தர வேண் டும். பள்ளி நேரங்களில் மாணவர்களை கண்டுகொள்ளாத ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, புதிய ஆசிரியர் களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.