இராமநாதபுரம், ஜூன் 19- மாற்றுத்திறனாளிகள் குடும்பங்க ளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு உடனே வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர தடையில்லா சூழலை உருவாக்க வேண்டும், உத வித்தொகையை ரூ.1,500-ஆக உயர்த்தி நிலுவையின்ற வழங்க வேண்டும். சுய தொழில் செய்ய வங்கிக் கடன் வழங்க வேண்டும். குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் இராம நாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் எம்.ராஜேஷ், ஹரிஹரசுதன், சீனி வாசன், ஸ்டாலின் முகமது, சுல்தான் காமேஷ், மாநிலச் செயலாளர் பி. ஜீவா, எஸ்.முனியசாமி, நிலர்வேணி, முத்துராமலிங்கம்,சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர் சம்மந் தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.