தேனி ,செப்.8- தேனி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் மேற்கொண்ட சொகுசு சுற்றுப் பயணத்தால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிளக்ஸ் பேனர்கள் கடைகளை மறைத்து வைக்கப்பட்டதால் வர்த்தகர்கள் முகம் சுளித்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி க்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு மேல் வந்து சேர்ந்தார் அண்ணாமலை. அவரை ,மாலை 5.30 மணிக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து வரவேற்க முடிவு செய்யப்பட்டது. மாலையை தூக்கிச் சென்ற கிரேன் வேலப்பர் கோவில் விலக்கிலிருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஊர்ந்து சென்றது .இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் மதுரை சாலையில் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. காவல்துறையினர் தங்களுக்கு சம்பந்தமில்லாதது போல் அமைதி காத்தனர். அண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்வ தால் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடியாமல் காவல்துறை ஒரு புறம் தவிக்க, மற்றொருபுரம் வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். நடைப் பயணத்தில் ஏற்கனவே திட்ட மிடப்பட்டு அழைத்து வந்த நபர்கள் மட்டுமே சுற்றுலா சூட்டிங்கில் கலந்து கொண்டனர். வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகளை மறைத்து அண்ணா மலையை வரவேற்று ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இதற்காக பாஜக காவல் துறையிடமோ, நகராட்சியிடமோ அனுமதி ஏதும் பெறவில்லை. பசியோடு காத்திருந்த மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதி யாக வெள்ளிக்கிழமை துரைச் சாமிபுரம் கிராமத்தில் மக்கள் சபை என்ற பெயரில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை பத்து மணிக்கு அண்ணாமலை வருவதாக இருந்தது. அதனால் கட்சியினர் காலை 10 மணிக்கு சுற்றியுள்ள கிராம பொதுமக்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அமர வைத்திருந்தனர். பிற்பகல் ஒரு மணி ஆகியும் அண்ணாமலை வரவில்லை.
பசி யுடன் காத்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்கி னர். இதைக் கண்ட கட்சியினர் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் களை வாங்கிக் கொடுத்து மீண்டும் வலுக்கட்டாயமாக அமர வைத்த னர். ஒரு வழியாக பிற்பகல் மூன்று மணிக்கு அண்ணாமலை துரைச் சாமிபுரம் வந்து சேர்ந்தார் ஏமாற்றப்பட்ட மக்கள் கடமலை-மயிலை ஒன்றிய மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள், வனப்பகுதியிலிருந்து தங்களை வெளியேற்ற வனத் துறையினர் தொடர்ந்து முயற்சி த்து வருவதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ தாகவும் அண்ணாமலையிடம் தெரி வித்தனர். பிரச்சனை தொடர்பான மனுக்களையும் அளித்தனர். ஆனால் வனத்துறையினர் பிரச் சனை தொடர்பாக எதுவும் பேசா மல் மோடியின் திட்டங்களை மட்டும் பேசிவிட்டு மனுக்களை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு அண்ணாமலை சென்று விட்டார். இதனால் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து மனு அளித்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. பாஜக தலைவர்கள் அதிருப்தி விளம்பரப் பதாகையில் ஏற்க னவே பாஜகவில் நீண்டகாலமாக தலைவர்களாக பணியாற்றியவர்க ளின் புகைப்படங்கள் இடம்பெற வில்லை. இதனால் காலம் கால மாக இருந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.