districts

img

சங்கத்தில் இணைந்த திருமஞ்சண வீதி மக்கள்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதி யில் உள்ள திருமஞ்சண வீதியில் குடியிருக்கும் மக்கள் தமிழ்நாடு அடிமணை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்தனர்.  தாடிக்கொம்பு பகுதியில் உள்ள திரு மஞ்சண வீதி இந்துசமய அறநிலையத்துறை க்கு சொந்தமானது என்று கூறிக்கொண்டு அதன் அதிகாரிகள் வீடுகளை அப்புறப்படுத்த வந்தனர். அப்போது  இப்பகுதி மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு அடிமனை சங்கமும்  போராட்டத்தில் ஈடு பட்டது. இந்நிலையில் இந்த பகுதி மக்களின் வீடுகளை இடிக்கக்கூடாது என்றும் அப்புறப் படுத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அதிகாரிகளைச் சந்தித்து தொடர்ந்து முறையிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிமனை சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இத னையொட்டி தகவல் பலகை திறந்து வைக்கப் பட்டது.  சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி நட ராஜன் கலந்து கொண்டு தகவல் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.தயாளன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் என்.பெருமாள், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத்குமார், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், சங்க கிளைச்செய லாளர் டி.சசிக்குமார், கிளைத்தலைவர் சுரேஷ் கண்ணன், பொருளாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி)