தூத்துக்குடி,நவ.3 தூத்துக்குடியில் துறைமுக சாலை யில் மேம்பாலத்திற்கு ராட்சத தூண்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பா லம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தூண்க ளை பாலத்தின் மீது நிறுவும் பணி விறு விறுப்படைந்துள்ளது. இதையடுத்து துறை முக சாலையில் புதன் முதல் 10 நாட்க ளுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. 2023 பிப்ரவரியில் இப்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் 32 ராட்சத கான்கீரிட் தூண்கள் பொருத்தும் பணி, நேற்று (2ம் தேதி) முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாலம் பணிகள் துவங்கி நடை பெறுவதால் பாலத்தின் வடக்கு பகுதி யில் காமராஜ் கல்லூரியில் இருந்து வரும் ரயில்வே மேம்பாலம் வழி அடைக் கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை காம ராஜ் கல்லூரி சாலை வழியாக திருச்செந் தூர் ரவுண்டானா (பாலம் கட்டப்படும் இடத்திற்கு) வரும் அனைத்து வாகனங்க ளும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுக சபை விருந்தினர் விடுதி, ஸ்பிக், டாக் இணைப்பு சாலை வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைக்கு செல்ல வேண்டும். இதனால் தென்பகுதி முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதிகளில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . இந்நிலையில் பாலம் பணி நடை பெறக்கூடிய பகுதிகளில் பாதை தொடர்பான அறிவிப்பு பலகைகளோ, போக்குவரத்து காவலர்களோ இல்லா மல் இருப்பதால் எதிரெதிரே வரும் வாக னங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மின்விளக்குகள் இல்லை, இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.