கடமலைக்குண்டு, ஜன.18- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரட்டுப்பட்டியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் முருகன் கோவில் மலை அடிவாரத்தின் வழி யாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு பள்ளி மாணவ-மாணவி களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மேலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை தவிர்த்து மாற்று பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்து வதை தவிர்க்கும் வகையில் சுகாதார நிலையம் அருகே சாலையோரம் புதிய கழிப்பறைகள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை யை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பறை கள் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து பயன்பாடு இல்லாமல் காணப்படுவதால் கழிப்பறை களை சுற்றிலும் மரம், செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள் ளன. இந்த நிலை நீடித்தால் கழிப்பறை கட்டிடம் பயன் பாட்டிற்கு வருவதற்கு முன்பு இடிந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.