சென்னை, ஆக.7- மாநில மற்றும் தேசிய நெடுஞ் சாலைகளில் லாரிகள், மினி வேன்கள் அதிகளவில் சரக்குகளை ஏற்றிச் செல்வதை தடுக்கும் வகை யில் போக்குவரத்துத் துறை, வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிக பாரம் ஏற்றிய குற்றத் திற்காக சரக்குதாரர், வாகன உரிமை யாளர் மற்றும் வாகனங்கள் மீது ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் அதிகபட்ச அப ராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்ச கத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சமீபத்தில் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரி களுக்கு பிரிவு 113, பிரிவு 114, பிரிவு 194 விதிகளின்படி “ஓவர் லோடு”வாகனங்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதிக சுமை ஏற்றும் வாகனங்க ளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதேபோல அந்த வாகனத்தின் டிரைவர், அதிக சுமையை மதிப்பிடுவதற்கு எடை அளவு செய்ய கொண்டு செல்ல வேண்டும். அதிக சுமை இருப்பது கண்டறியப்பட்டால் அதிக எடையை வாகனத்தில் இருந்து இறக்க வேண்டும். இதை செய்ய தவறி னால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக் கப்படலாம். மேலும் வாகனங்களில் அதிக சுமை ஏற்றுவதற்கு சரக்கு அனுப்புப வர், வாகன உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது வழக்குகளை பதிவு செய்ய ஆய்வாளர் அல்லது காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக் கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் கூறியுள்ளார்.