districts

img

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப்.11-   மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு, அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் பணி மனை முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரவு- செலவு வித்தியாசத் தொகையை வழங்கி பற்றாக் குறையை தீர்வு செய்ய வேண்டும்;  106 மாத டிஏ நிலுவை, 21 மாத  ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை அரசு  போக்குவரத்து தலைமையகம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்றது. அரசு  தலைமையகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க மாவட்  டத் தலைவர் பி.எம்.அழகர்சாமி  தலைமை வகித்தார். டிடிஎஸ்எப் நிர்வாகி திருமலைசாமி, ஓய்வு  பெற்ற அமைப்பு நிர்வாகி செண் பகம், ஏஐடியுசி நிர்வாகி நந்தாசிங் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு அரசு  போக்குவரத்து மதுரை தொழிலா ளர் சங்க பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் சிறப்புரையாற்றினார்.  மதுரை அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு அரசு  விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் என்.லட்சுமணபெருமாள் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.செல்லத்துரை முன்னிலை வகித்தார். மாநில உதவி தலைவர் வீ.பிச்சை  துவக்கி வைத்து பேசினார். அரசு  விரைவு போக்குவரத்து ஊழியர்  சங்க மாநில துணைத் தலைவர் சி. குமார், அரசு விரைவு போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி மகாலிங்கம், கிளை செயலாளர் நாகராஜன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் பணிமனை துணைத்தலைவர் ஜி.செந்தில் நன்றி கூறினார்.