மதுரை,ஜூன் 23- மதுரையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.பாலா வலியுறுத்தியுள் ளார்.
தென்னக ரயில்வேயில் மதுரை கோட்ட பயணிகள் ஆலோசனைக்குழு கூட்டம் தென்னக இரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தலைமையில் நடைபெற்றது. மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் வரவேற் றார்.
இக்கூட்டத்தில் ரயில்வே ஆலோ சனைக் குழுவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், எஸ்.பாலா என்கிற பாலவேலன், பாண்டியராஜா, தேனி ஜெயபாண்டியன் சிவசுந்தரம், ராமநாதபுரம் கோவிந்தராஜ், செய்யது இப்ராஹீம், சிவகுமார், ராமு, ரயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.பாலா என்கிற பால வேலன் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:
மதுரையில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் 50 வருடங்களாக ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
பாண்டியன் எக்ஸ்பிரஸிற்கு பிறகு எந்த ஒரு ரயிலும் மதுரையில் இருந்து இயக்கப்படவில்லை. மதுரை வழியாக சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் காத்திருப்பு பட்டியல் நிரம்பி வழிகிறது. விழாக் காலங்கள் அல்லது முக்கியமான நேரங்களில் காத்திருப்பு பயணச்சீட்டு கூட வாங்க முடியாத நிலைமை உருவாகி இருக் கிறது.
இதனை கருத்தில் கொண்டு மதுரை கோட்ட நிர்வாகம், பாண்டி யன் எக்ஸ்பிரஸுக்கு நிழல் ரயில் இயக்கிட உடனடியாக முன் வர வேண்டும்.
மதுரை வைகை எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கு ஏற்கனவே இயக்கப் பட்ட நேரத்திலேயே இயக்க வேண்டும்.
ரயில் பெட்டிகளை குளிர்சாதன பெட்டிகளாக மாற்றும் நடவடிக்கை யை கைவிட வேண்டும்.
தண்ணீர், கழிப்பறை வசதிகளை செய்துதருக
மதுரை ரயில் நிலையத்தில் முன்பு போல சுத்திகரிப்பு முறையில் அனைத்து நடை மேடைகளிலும் தண் ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளை பயணிகளுக்கு செய்து தர வேண்டும். மதுரை ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் பயணிகளுக்கு இடை யூறு இன்றி பாதுகாப்பாக மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.
கீழ் மதுரை ரயில் நிலையத்தில் நடைபாதை அமைப்பு பணி இன்னும் துவங்கப்படவில்லை. உடனடியாக பணிகளை துவக்கிட வேண்டும்.
கோவை, போடி, இராமேஸ்வரம், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக் குடி ஆகிய வழித்தடங்களில் 100 சத வீதம் பயன்படுத்திடும் போது பல பய ணிகள் ரயில்களை இயக்க முடியும். இதற்கு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து பயன்படுத்தி வருவாய் பெருக்கிட மதுரை கோட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும்.
பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்துக!
எந்த பாதுகாப்பும் வாகனங்களுக்கு கூரை வசதி கூட எதுவும் இன்றி ரயில்வே நிலையத்தை சுற்றிலும் பார்க்கிங் என்ற பெயரில் வரைமுறையின்றி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.இதனை முறைப்படுத்திட வேண்டும்.
ரயில் பயணிகளை இறக்கி விடுவ தற்கும் ஏற்றிச்செல்வதற்கும் வரக் கூடிய வாகனங்களுக்கு பத்து நிமிட அனுமதி ரயில்வே விதிகளின்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விதி களை மீறி நூற்றுக்கணக்கான வாக னங்களுக்கு அத்துமீறி வசூலிக்கின்ற போக்கு தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே நடந்த ரயில்வே பயணிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகும் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு இதனை உரிய முறையில் தடுத்திட வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வற்புறுத்தக்கூடாது
பயணச்சீட்டு வாங்க வருபவர்களி டம் யுபிஐ அல்லது டிஜிட்டல் பரி வர்த்தனைகளை வலியுறுத்தக் கூடாது. பணம் செலுத்தினால் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டுகளை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் பெண்களுக்கும் கடைகள் மற்றும் நிர் வாகத்தால் வழங்கக்கூடிய பல்வேறு டெண்டர்களுக்கு சட்டப்படியான வாய்ப்பு வழங்கிட வேண்டும்.
மதுரை- விழுப்புரம் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் அது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது திண்டுக்கல் -விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மீண்டும் இதனை மதுரை-விழுப்புரம்-மதுரை என இயக்கிட வேண்டும்.
கடந்த காலங்களில் இயக்கப்பட்ட பாலக்காடு-இராமேஸ்வரம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கிட வேண்டும். மதுரை பெங்களூருக்கு ரயிலை இயக்கிட வேண்டும். மதுரையில் இருந்து சென்னைக்கு (தாம்பரம்) காலை நேரத்தில் 9 மணிக்கு அல்லது மதியம் ஒரு மணிக்கு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை இயக்கிட முன்வர வேண்டும்.
ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மக்களுடைய பிரச்சனைகளுக்காக நிர்வாகத்தை அணுகும் போது உரிய முறையில் சந்திப்பதற்கும், பிரச்சனையை தீர்ப்ப தற்கும் முன்னுரிமை தர வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்திப் பேசினார்.