மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தயாரிப்பு சிறப்பு கூட்டம் ஞாயிறன்று செல்லூரில் நடைபெற்றது. கட்சியின் வடக்கு 1 பகுதிக்குழு, வடக்கு 2 பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதியை பகுதிக்குழு செயலாளர்கள் முறையே வி.கோட்டைசாமி, ஏ.பாலு ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வழங்கினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, டி.குமரவேல் எம்.சி., கே.அலாவுதீன், எஸ்.வேல்தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.