இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் பாசிப்பட்டிணம் ஊராட்சியில் 55 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மானியத் திட்டத்தில் தார்ப்பாய், பவர் ஸ்பேரயர், கை ஸ்பேரயர் போன்ற உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், பாசிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் உம்மூர் சலீமா நூர் அமீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.