districts

img

காளையார்கோவிலில் பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு

சிவகங்கை, செப்.15- சிவகங்கை தொல்நடைக்குழு நிறு வநர், புலவர் காளிராசா, செயலர் நரசிம்மன்,  கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளை யார்கோவில் பாண்டியன் கோட்டைப் பகுதி  மற்றும் காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு மேற் கொண்டனர்.  அப்போது காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்சி  நிறுவன விளையாட்டுத் திடலில் 3000 ஆண்டு கள் பழமையான கல்வட்ட எச்சங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்  குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறு கையில், ‘‘கானப்பேர், கானப்பேரெயில், திருக்கானப்பேர் என வழங்கப்படும் காளை யார்கோவில், சங்ககாலம் முதல் இயங்கி வரும் ஊராகும். இதற்குச் சான்றாக பாண்டி யன் கோட்டை திகழ்கிறது. பாண்டியன் கோட்டை காளையார்கோவிலில் நகர்ப் பகுதி யின் மையப் பகுதியில் வாள் மேல் நடந்த  அம்மன் கோவிலுக்கு வடக்குப் பகுதியில் 33 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அகழி சூழ நீராவிக் குளத்துடன் பாண்டியன் கோட்டை தொல்லியல் மேடாகவும் காடாக வும் காட்சி தருகிறது. கானப்பேர் கோட்டை பற்றியும் அதன்  அகழி பற்றியும் இப்பகுதியை ஆண்ட வேங்கை மார்பன் பாண்டியன் உக்கிரப் பெரு வழுதி வெற்றி கொண்ட செய்தி பற்றியும் புற நானூற்றின் 21 பாடல் எடுத்துரைக்கிறது. மேலும் இதற்குச் சான்றாக பானை ஓடுகள் விரவிக் கிடப்பதோடு மோசிதபன் என எழுதப்பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு, பானை ஓட்டுக் கீறல்கள், வட்டச்  சில்லுகள், சங்க கால ஓட்டு எச்சம், சங்க கால  செங்கல் எச்சங்கள் முதலியன கிடைக்கப் பெற்றுள்ளன

. சங்க காலத்திற்கும் முந்தைய ஊர் பொதுவாக சங்க காலத்தை இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். ஆனால், அதற்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது பெருங்கற்காலம் எனலாம். நகர்ப் பகுதியிலே இக்கல் வட்டங்கள் காணப்படுவதால் சங்க காலத்திற்கு முன்பி ருந்தே இப்பகுதி மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக விளங்கியுள்ளதை அறிய முடி கிறது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் இறந்த மனிதனுக்கு மீண்டும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையிலோ நல்லடக்கம் செய்யவோ பெருங்கற்களைக் கொண்டு ஈமச் சின்னங்களை அமைத்த காலங்களை பெருங்கற்காலம் என்கிறோம். இவ்வாறான கல் வட்டங்கள் பெருங்கற்கள் வட்ட வடிவமாக அடுக்கி காணப்படுகின்றன.  காளையார்கோவிலில் கல் வட்டம் காளையார்கோவில் தென்றல் நகரை அடுத்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளை யாட்டுத் திடலில் முழுவதும் தரையில் புதைந்த நிலையில் அடுத்தடுத்து கல் வட்டங்  கள் எச்சங்களாக காணக் கிடைக்கின்றன.  இவற்றைக் கொண்டு இப்பகுதி பெருங்  கற்கால ஈமக் காடாக இருந்ததை அறிய முடி கிறது. மேலும் மேற்பரப்பிலே பெருங்கற் கள் இப்பகுதியில் சாலையோரங்களில் கிடப்ப தும் இதற்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. இப்பகுதியில் நல்லேந்தல், அ.வேளாங் குளம் போன்ற இடங்களில் சிதைவுறாத கல் வட்டங்கள் பெருமளவில் காணக் கிடைப்ப தும் குறிப்பிடத்தக்கது’’ என்றார்.