பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.68 கோடி
பழனி, மே 10- பழனி மலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 68 லட்சத்தது 98 ஆயி ரத்து 887 வருவாயாக கிடைத்தது. முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 447 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 384 செலுத்தப்பட்டி ருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 444 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 4 கிலோ 499 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டி ருந்தன. இரண்டாவது நாளாக புதனன்று ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 440 வருவாய் கிடைத்தது. தங்கம் 865 கிராம், வெள்ளி 14 கிலோ 112 கிராம் , வெளிநாட்டு கரன்சிகள் 688-ம் கிடைத்தன. கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 68 லட்சத்து 98ஆயிரத்து 887 வருவாயாக கிடைத்தது. தங்கம் 1309 கிராம், வெள்ளி 18 கிலோ 611 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1072-ம் கிடைத்தன. இந்த எண்ணும் பணியில் கோவில் இணை ஆணை யாளர் நடராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
இராமேஸ்வரம், மே 10- தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மீனவர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறை முகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு புதன்கிழமை யன்று ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் இராம நாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு தொலை தூர எச்ச ரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. மேலும் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்க வேண்டும் என வானிமை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பாதுகாப்பு கருதி கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கதம்ப வண்டுகள் அழிப்பு
விருதுநகர், மே.10- விருதுநகரில் வீட்டில் இருந்த கதம்ப வண்டுகளை தீயணைப்புத் துறையினர் அழித்தனர். விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்டது தந்திமரத்தெரு. இப்பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி. இவரது வீட்டில் கதம்ப வண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பலமணி நேரம் போராடி 200-க்கும் மேற்பட்ட கதம்ப வண்டுகளை தண் ணீரை பீய்ச்சியடித்து அழித்தனர்.
தேனி அருகே தோட்டத்தில் பெண் வெட்டிக் கொலை
தேனி, மே 10- தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டி, வாசுகி அம்மை யார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி(45). இவர், மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக தோட்டத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் செல்வி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் வடபுதுப்பட்டி, அழகர் கோயில் சாலை, கோம்பை கரடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு அருகே செல்வி தலையில் வெட்டுபட்டு இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத் தாலி திருடு போயிருந்ததாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தில் சருத்துப்பட்டியைச் சேர்ந்த மாசானம் மகன் இருளப்பன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது என்று அல்லிநகரம் காவல் நிலை யத்தில் பெருமாள் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், இருளப்பனிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோவில் வாலிபர் கைது
நத்தம், மே 10- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில் பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, பாண்டிச் செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
பூவந்தியில் மீன்பாசி ஏலத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு
ஊராட்சி தலைவர் சிவகங்கை ஆட்சியரிடம் புகார் மனு
சிவகங்கை, மே 10- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பூவந்தி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை கண்மா யில் மீன் பாசி ஏலத்தில் 40 லட்சத்துக்கு செல்ல வேண் டிய ஏலத்தை 40 ஆயிரத் துக்கு முடித்து முறைகேடு செய்துள்ளதாக பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ஆறுமுகம், துணை தலைவர் மகாலிங்கம் ஆகி யோர் மாவட்ட ஆட்சித் தலை வரிடமும் பொதுப்பணித் துறை அதிகாரியிடமும் புகார் மனு கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் வீரபாண்டி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றிய செய லாளர் அய்யப்பாண்டி ,கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ஆறு முகம் ,பூவந்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகா லிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர். பூவந்தி கண்மாய் பொதுப்பணித்துறை பரா மரிப்பில் உள்ளது. இக்கண் மாயில் சுமார் 900 ஏக்கர் பாசன நிலம் உள்ளது.சுமார் 800 ஏக்கரில் கரும்பு ,வாழை, நெல் பயிர் செய்யப்பட்டு வரு கிறது. பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பி னர்கள், ஒன்றிய கவுன்சிலர் கள், பொது மக்களுக்கு தெரி யாமல் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பூவந்தி கண்மா யில் மீன் பாசி ஏலம் விடப் பட்டுள்ளது. இதனால் நடப்பு பயிர்கள் பாதிக்கப்படும் நிலைமை உள்ளது. இவை விதிமுறைகளுக்கு மாறாக ஏலம் விடப்பட்டுள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் . இதனால் கிராமத்திற்குள் மோதலை ஏற்படுத்தும் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக ஏலம் விடப் பட்டுள்ளதை ரத்து செய்து விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர். மீன் பாசி ஏலத்தை ரத்து செய்வ தாக மாவட்ட ஆட்சியர் ,மனு அளித்தவர்களிடம் உறுதி கொடுத்தார்.
நங்காஞ்சியாறு அணை திறந்தும் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை
கரூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
ஒட்டன்சத்திரம், மே 10- இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை வாய்க்கால்கள் மூலம் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டாலும் கடைமடை வரை தண்ணீர் வராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்த னர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. வட கிழக்கு பருவமழையால் அணை நிரம்பி மொத்த உயரம் 39.37 அடி எட்டியது. இந்த தண்ணீர் அணையில் தேக்கி வைக்கப் பட்டது. இதற்கிடையே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார். இதனையடுத்து கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று வாய்க்கால் மூலம் திறக்கப்பட்டது 40 நாட்களுக்கு மொத்தம் 177.67 மில்லி யன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையக்கோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்த மங்கலம் பகுதியில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதன்படி திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்நிலையில் வலையபட்டி அருகே சிலரால் வாய்க்கால் உடைக்கப்பட்டதால் தண்ணீர் காட்டுப்பகுதியில் வீணாகச் சென்றது. 40 நாளை நெருங்கி வரும் நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் உள்ள குரிக்காரன்வலசு, குரும்ப பட்டி ஆகிய பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பாத நிலையில் கடைமரை வரை தண்ணீர் முழுமையாக செல்லாததால் கரூர் மாவட்ட விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். வாய்க்கால் பணியை முழுமையாக முடித்திடுக! இது குறித்து நங்காஞ்சியாறு அணை கிழக்கு பாசன வாய்க்கால் பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் முனுசாமி கூறுகை யில், இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணையில் இருந்து செல்லும் கீழ் மட்டம் மற்றும் மேல்பட்ட வாய்க்கால் மூலமாக தண்ணீர் விவசாய பாசனத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் இதுவரை வாய்க்கால் பணி முழுமையாக நடைபெறாததால் அணை யில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறந்து விட்டாலும் கடைமடை வரை வந்து சேரவில்லை. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் கடந்த பல வரு டங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் முழுமையாக செல்லாததால் கரூர் மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்தும் பயனில்லாத நிலையில் தவிர்த்து வரு கின்றோம். இது குறித்து கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு வாய்க்கால் பணியை முழுமை பெற வைத்து விவசாய பாசனத்திற்கு சீரான தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நங்காஞ்சியாறு அணையின் வாய்க்கால் செல்லும் நிலங்களை உட்பிரிவு செய்து அரசால் கையங்கப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
குட்கா, புகையிலை விற்ற 4 பேர் கைது
திருவில்லிபுத்தூர், மே.10- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி(29). இவர் தனது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார். அதே போல் சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த கருப்பையா (43), தனது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். கோட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த காரை சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட கோட்டையூரை சேர்ந்த வீரகுமார்(33) ராஜ பாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த சந்தான நல்லஜெகன்(33) ஆகியோரை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 221 பாக்கெட் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
பெரியகுளத்தில் அரசு நிலங்கள் அபகரிப்பு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் கைது
தேனி, மே 10- பெரியகுளத்தில் அரசு நிலங்களை அபகரித்த ஒப்பந்த தாரர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் அரசு அதிகாரிகள் துணை யுடன் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் மண்டல துணை தாசில்தார்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர் , பெரியகுளம் முன்னாள் அதி முக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்து வேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மேலும் பலரின் பெயர்கள் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில் தாசில்தார் கிருஷ்ணகுமார், அன்ன பிரகாஷ் உள்பட 13 பேர் ஏற்கனவே கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில், வடபுதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தர்மர், அபிமன்னன் , அம்மா பட்டியை சேர்ந்த முத்துராஜ் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமை யிலான போலீசார் புதனன்று கைது செய்தனர். அவர்களி டம் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கைதானவர்களில் தர்மர் விவ சாயி, அபிமன்னன் ஒப்பந்ததாரர், முத்துராஜ் தோட்டக் காவலாளி என்பது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி னர்.பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் பலி
திருவாரூர், மே 10- திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் ஆலத்தூ ரைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் அரசு வேலைக்கும், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து கிடைக்காததால் கொடி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு இருந் தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை மாரியம்மன் கோவில் அருகே விவசாய நிலங்களுக்கு மேல் செல்லும் மின் கம்பி அறுந்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் அங்கு மேய்ச்ச லுக்கு ஓட்டி வந்த 30 ஆடுகளில் 5 ஆடுகள் மின்கம்பி யில் சிக்கி உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். தமிழக அரசு இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செந்தில் நாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு பேருந்து கவிழ்ந்து 54 பயணிகள் காயம்
திருத்துறைப்பூண்டி, மே 10- திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியகாடு செல்லும் அரசு பேருந்து, பாண்டி வளைவு அருகே சென்ற போது வாய்க்காலில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்று பேருந்தில் சிக்கி இருந்த 54-க்கும் மேற் பட்ட பயணிகளை மீட்டனர். விபத்தில் காயமடைந்த 15 ஆண்கள், 39 பெண்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 10-க்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
நெல்லையில் பூக்களின் விலை கடும் உயர்வு
திருநெல்வேலி, மே 10- மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாக வும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமா கவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினா லும், மழைப் பொழிவு அதிகரிப்பதன் கார ணமாகவும் புதன்கிழமை ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற் பனையானது. அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப் பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலை யில் விற்பனையானது.