சிவகாசி, டிச.15- சிவகாசி அருகே சித்தமநாயக் கன்பட்டியில் தனியார் அட்டை மில்லில் 18 வயதான வெளி மாநிலத் தொழிலாளி வேலை செய்த போது இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். பீகார் மாநிலம், சம்ரன் மாவட் டத்தைச் சேர்ந்தவர் நைய்ம் அன்சாரி மகன் மன்சூர் அன்சாரி (18). இவர் சித்தமநாயக்கன்பட்டி அருகே உள்ள பாவம்மாள் பேப்பர் கம் பெனியில் வேலை செய்து வந்துள் ளார். இந்நிலையில், இரவுப் பணி யின் போது, கண்வேயரில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடன் பணிபுரிந்த லஷ்மன்குமார் ஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசியைச் சுற்றி ஏராள மான தனியார் பேப்பர் மில் மற்றும் அட்டை மில்கள் இயங்கி வருகின்றன. இதில், பீகார், ஒடிசா, உத்தரப்பிரதே சம் உள்ளிட்ட பல்வேறு வடமாநி லத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குறைவான கூலி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தங்குமிடம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. மேலும், பல ஆலைகளில், 18 வயது நிரம்பாத சிறுவர்களை ஆபத்தான, அபாயகர மான பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெளி மாநிலத் தொழிலாளர்கள் சிலரை ஆலை நிர்வாகமானது, ஊதி யம், உணவு ஏதும் வழங்காமல், ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றனர். பின்பு, மாவட்ட நிர்வா கம் தலையீடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையி னர், சிவகாசி மற்றும் விருதுநகரைச் சுற்றியுள்ள தனியார் ஆலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழி லாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம், அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்பதை தொ டர்ந்து கண்காணிக்க வேண்டும். வழங்காத ஆலைகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.