நாமக்கல். டிச.19- உஞ்சனை ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் நாமக் கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உஞ்சனை ஊராட்சி தொட்டியங்காடு தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள தனியார் நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டது. இதற்கு ஆரம்பம் முதலே இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் டாஸ்மார்க் மதுபான கடை அமையக்கூடிய இடத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. விதிகளை கடைபிடிக்காமல் வட்டாட்சியர் சான்று வழங்கி யுள்ளார். மேலும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடை பெறும் இடமாகவும் இரவு நேரத்தில் சட்டவிரோத சம்பவங் கள் நடைபெற்று வரக்கூடிய இடமாக இப்பகுதி உள்ளது. இதனால், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எவ் வித பாதுகாப்பும் இல்லாத நிலையில் டாஸ்மாக் கடையை அமைக்கக்கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலைமையில் மனு அளிக்க திர ளான பொதுமக்கள் வந்திருந்தனர்.