districts

img

காளையார்கோவில் பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

 சிவகங்கை, மார்ச் 11- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்  அரசு மேல்நிலைப்பள்ளியில் “மகாத்மா காந்தி” புதிய நூல கத்தை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும், நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினருமான  ப. சிதம்பரம்   திறந்து வைத்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன்,  பள்ளி உதவித்  தலைமை ஆசிரியர் உதயகுமார், நூலகப் பொறுப்பாளர்  கோமதி, பசுமைப் படை ஆசிரியர் ராம்குமார், சாரண ஆசி ரியர் ஆ.நாகராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.