விவசாயிகள், விவசாயத் தொழிலாளர், சிஐடியு போராட்டம்
மதுரை, ஜன.12- அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை 2022ஆம் ஆண்டில் திறக் கப்படும் என சட்டமன்றத்தில் தமிழ் நாடு அரசு அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். ஆலையை மூடி மதுரை மாவட் டத்தில் கரும்பு விவசாயத்தை அழிக்காதே என்று கோரியும், ஆலையை உடனே திறந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜன வரி 12 வியாழனன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ்வரன், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.அரவிந்தன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் மாநிலத் துணைத் தலை வர் என்.பழனிச்சாமி, ஆகியோர் விளக்கிப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலை வர் ஏ.லாசர் நிறைவுரையாற்றி னார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, கரும்பு விவசாயிகள் சங்கம் தேசிய கூட்டு றவு சர்க்கரை ஆலை செயலாளர் கரு.கதிரேசன் உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.