மானாமதுரை, மே 14- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற் றுக்குள் மணல் குவாரி அமை த்து மணல் அள்ளுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரி வித்து ஜேசிபி இயந்திரங் களை மறித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத் திற்கு உட்பட்ட வைகை ஆற் றுப்பகுதியில் 38 குடிநீர் திட் டங்கள் உள்ளன. மதுரை, அருப்புக்கோட்டை, கடலாடி, சிவகங்கை மானாமதுரை மற்றும் கிராமப்புறங்களுக் கும் ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படு கிறது. வைகை ஆற்றுப்பகு தியில் கோகோ கோலா கம் பெனி தண்ணீர் எடுப்பதற்கு முயற்சி செய்தபோது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய போரா ட்டத்தால் கைவிடப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத் தில் மணல் கொள்ளை அமோகமாக நடந்தது .அந்த கொள்ளையர்கள் தற்போ தும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதியரேந்தல் வைகை ஆற்றுக்குள் மணல் அள்ளிய கும்பலை கிராம நிர்வாக அலு வலர் கோபாலகிருஷணன் தடுத்து நிறுத்தி மணல் அள் ளிய லாரிகளை கைப்பற்றி யிருக்கிறார். மானாமதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சட்ட விரோதமாக மணல் அள்ளு வது நடைபெற்று வருகிறது. மணல் அள்ளுவதற்கு உரி மம் வழங்குவதற்கான நட வடிக்கை எடுத்து வருவதாக பரவலான தகவல் உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் ஆண்டி கூறு கையில், மானாமதுரை வைகை ஆற்றுக்கு உள்ளிட்ட பகுதியில் மணல் குவாரி அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யோடு எதிர்க்கும். அதை அனுமதிக்க மாட்டோம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகு திகளில் உரிமம் வழங்கி மணல் அள்ளி அதில் ஏராள மான முறைகேடுகள் நடந் தன. இரண்டு அடிகள் மட் டுமே அனுமதி வாங்கிவிட்டு 100, 150 அடி ஆழத்தில் மணல் அள்ளி கொள்ளை யடித்த கும்பல் மீது திமுக ஆட்சியில் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.