விருதுநகர், ஜூலை 31- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒஎச்டி ஆப்பரேட்டர்கள், தூய்மைப் பணி யாளர்கள் விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியில் போராட்டம் நடத்தினர். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஓ.எச்.டி ஆப்பரேட்டர், தூய்மைப் பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு சிறப்புக் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை (சிஐடியு)ஊழியர் சங்கம் சார்பில் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் பெருந்திரள் முறை யீடு நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.திருமலை தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட இணைச் செயலா ளர் பி.ராமர், மாவட்டப் பொதுச் செயலா ளர் ஆர்.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் பெருமாள், சுரேஷ்குமார், செல்வராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.