districts

img

சிபிஎம் சாலை மறியல் அறிவிப்பு எதிரொலி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி

மதுரை, அக்.27- மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் துள்ளுக்  குட்டி நாயக்கனூர் கிரா மத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி, அனைத்து தெருக் களுக்கும் சிமிண்ட் சாலை, சாக்கடை அமைப்பது உள்  ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நவம்பர் 1 அன்று எம்.கல்லுப் பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராம பொது மக்கள் சார்பில் சாலை மறி யல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில், சேட பட்டி வட்டார வளர்ச்சி அதி காரி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதன்  படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில், சிபிஎம் களைச் செயலாளர் செல்  வம், ஒன்றியச் செயலாளர் பி.காசிமாயன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஏ.இளங் கோவன், ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் பெ.ராஜா சங்கர், என்.ஜெயபால் மற்  றும் துள்ளுக்குட்டி நாயக்க னூர் ஊராட்சி மன்ற தலை வர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், குடிநீர் தொட்டி அளவீடு  செய்து பணியை துவங்கு வது, தெரு விளக்குகளை சனிக்கிழமைக்குள் சரி செய்வது, விரிவாக்கப் பகுதி யில் 25 விளக்குகள் அமைத்  திட ரூ.4 லட்சம் ஊராட்சி நிதி யிலிருந்து ஒதுக்கீடு செய் வது, வடக்கு தெருவில் வாய்க்காலுடன் சிமெண்ட் சாலை அமைத்து தருவது, பள்ளி அருகில் உள்ள குடி நீர்த்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டிக் கொடுப்பது என்பன உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கை களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.