districts

img

மாமேதை காரல் மார்க்ஸ் குறித்த அவதூறுப்பேச்சுக்கு எதிர்ப்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப். 26-  மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து பிப்ரவரி 25 சனிக்கிழமையன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்  பில் தெற்குவாசல் மார்க்கெட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய - 2 ஆம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன் துவக்கி வைத்து பேசினார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜே. லூர்துரூபி, மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மாநில செயற்குழு உறுப்பி னர்-மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றி னார். இதில் துணை மேயர் டி. நாக ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் டி. குமர வேல், வை. ஜென்னியம்மாள், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே. வசந்  தன், ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், எம்.  பாலசுப்பிரமணியம், அ. கோவிந்த ராஜன், ஆர். சசிகலா, வை. ஸ்டாலின்,  ஜெ. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;