districts

img

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

குழித்துறை, அக் 12- எண்ணும் எழுத்தும் பயிற்சி மேல்புறம் வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சார்ந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் 215 ஆசிரியர்களுக்கு நடைபெற்றது. இந்த பயிற்சியானது 10.10.2022 முதல் 12.10.2022 வரை மூன்று நாட்கள் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி திருத்துவபுரத்திலும் , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மார்த்தாண்டத்திலும் நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலு வலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர், பயிற்றுநர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.