districts

மதுரை முக்கிய செய்திகள்

போடி - சென்னை ரயிலில்  முன்பதிவற்ற பெட்டிகள் இல்லை தேனி மக்கள் அதிருப்தி

போடி, ஜன.23-  சென்னையில் இருந்து மதுரை வரை வரும் அதி வேக ரயில் பிப்ரவரி 19 முதல் போடி வரை நீட்டிக்கப்பட  உள்ளது. இந்த ரயிலில் அனைத்தும் முன்பதிவு பெட்டி களே உள்ளன. ஆகவே பொதுப் பெட்டிகளையும் இதில்  இணைத்து இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பயணி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை - போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை சிறப்பு பயணி கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  அதேபோல் வாரம் மூன்று நாட்களுக்கு போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும்(20602), சென்னையில் இருந்து போடிக்கும் (20601) ரயில் இயக்கப்படும் என்று  தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில்  தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டிகளும், மற்ற அனைத்  தும் ஏசி பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. முன்பதி வற்ற பெட்டிகள் இல்லாததால் பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

தாழையூத்து-மல்லபுரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?

கடமலைக்குண்டு, ஜன.23- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் தாழை யூத்து கிராமத்திலிருந்து மதுரை மாவட்டம் மல்லபுரம் கிராமத்தை இணைக்கும் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து-மல்லபுரம்  இடையே தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடமலை- மயிலை ஒன்றியத்திலிருந்து விருதுநகர், பேரையூர், ஏழு மலை, இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உசி லம்பட்டி வழியாகச் செல்வதை விட மலைச்சாலையைப் பயன்படுத்தினால் பயணத் தூரம் குறைவு. மலைச்சாலை அமைக்கப்பட்ட பின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வில்லை. இதனால் சாலைகள் சேதமடைந்து போக்கு வரத்திற்குத் தகுதியற்றதாக மாறியுள்ளது. ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூடச் செல்ல முடி யாத நிலை உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுத்துத் தாழையூத்து-மல்லபுரம் இடையே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரைக்குளம் கண்மாய்  மீன் பிடிக் குத்தகை ஏலம்

தேனி, ஜன.23- பெரியகுளம் அருகே தாமரைக்குளம்‌‌ கண்மாய்‌க்கு வைகை அணையில் உள்ள மீன்வளம் உதவி இயக்கு நர் அலுவலகத்தில் மீன்பிடிக் குத்தகை ஏலம் நடைபெற்றது. வைகை அணையில் மீன்வளத்துறை உதவி இயக்கு நர் அலுவலகத்தில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தாம ரைக் குளம் கண்மாய் மீன்பிடிக் குத்தகை ஏலம் நடை பெற்றது. கடந்த ஆண்டு விடப்பட்ட குத்தகை ஏலத்தின் அடிப்படையில் ரூபாய் 5 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கு  வங்கி வரைவோலை செலுத்தி ஏலத்தில் 45 நபர்கள் பங்கேற்றனர். மீன்வளத்துறை துணை இயக்குநர் பஞ்ச ராஜா தலைமையில், பெரியகுளம் வட்டாட்சியர் காதர்  ஷெரீப் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. அரசு ரூ.10  லட்சத்து 25 ஆயிரம் நிர்ணயித்தது. ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டதில் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டி ருந்தது. தொடர்ந்து நடந்த பகிரங்க ஏலத்தில் பெரிய குளத்தைச்‌ சேர்ந்த பழனி முருகன் ரூ.12 லட்சத்து 2 ஆயி ரத்திற்கு ஏலம் கேட்டார். இதனையடுத்து அவருக்குக் குத்தகை விடப்பட்டது.

இராஜபாளையத்தில் கொலை

இராஜபாளையம், ஜன.23- இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (30). இவர் தேவதானத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(25) என்பவரிடம் ரூ.15 ஆயிரம் கடன்  பெற்றுள்ளார். மருதுபாண்டி பணத்தைக் திருப்பிக் கேட்ட தற்கு ஆனந்தகுமார் தர மறுத்துள்ளார். இதையடுத்து மருதுபாண்டி தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து,  ஆனந்தகுமாரை கடத்திச் சென்றார். இந்த நிலையில் திங்கள் காலை சேத்தூர் செங்கல் சூலை அருகே ஆனந்தகுமார் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சேத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மருதுபாண்டி உள்ளிட்ட ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.

பாலியல் தொல்லைக்கு “ஆயுள்”

திருவில்லிபுத்தூர், ஜன.23- விருதுநகரில் வசிப்பவர் முத்துப்பாண்டி (37) இவர்  2020-ஆம் ஆண்டுத் தனது மகளுக்குப் பாலியல் தொல்லை  தந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் திருவில்லிபுத்தூரில் உள்ள சிறார் பாலியல் குற்றத்தடுப்புச் சிறப்பு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பூரண ஜெயஆனந்த், முத்துப்பாண்டிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பாதிக் கப்பட்ட சிறுமிக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவார ணமாக வழங்க உத்தரவிட்டார்.

சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

ஆலப்புழா, ஜன.23- கேரளம் மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழா அருகே திங்கள்கிழமை காலை 1.30 மணியளவில் ஆந்திரா விலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதிய தில் பிரசாத், ஷிஜு, அமல், சச்சின் மற்றும் சுமோத்  ஆகிய ஐந்து பேர் பலியாயினர். இவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்து வந்தனர். ஐவரில்  நான்கு பேர் திருவனந்தபுரத்தையும் ஒருவர் கொல்லத்தை யும் சேர்ந்தவர்கள் ஆவர்.

100 நாள் வேலைக்கு ஊதியம் இல்லை

விருதுநகர், ஜன.23- விருதுநகர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் எட்டு வாரங்களாக மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்டத்தில் ஊதியம்  வழங்கவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதி யத்தை வழங்க அகில இந்  திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலை வர் எஸ்.பூங்கோதை, மாவட்  டச் செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சி.ஜோதி லட்சுமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:- மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி கள் நடைபெற்று வரு கிறது. பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு ஊராட்சி நிர்  வாகம் இரண்டு மாதங்க ளாக வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்  ளாகியுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பலர் கந்து  வட்டிக் கொடுமைக்கு உள்  ளாகும் நிலை ஏற்பட்டுள்  ளது. நிறுத்தி வைக்கப்பட் டுள்ள ஊதியத்தை உடனடி யாக வழங்க வேண்டும்.

உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி

தேனி, ஜன.23- உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களைப்  பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி டிச. 25-ஆம் தேதி ஆனைமலையான்பட்டி யில்உள்ள அரசு திராட்சை ஆராய்ச்சி நிலை யத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள் ளார். தேனி மாவட்டத்தில் பல்வேறு முன்  னோடி விவசாயிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக வும், அதிக விளைச்சல் தருவதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் மருத்துவக் குணம் கொண்டதாகவும் உள்ளது. சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்க ளைக் கண்டறிந்து, ரக மேம்பாட்டு பகு திக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சி கள் வருடத்திற்கு மூன்று முறை நடத்த அறி வுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, டிச.25-ஆம் தேதி ஆனை மலையான்பட்டியில் உள்ள அரசு திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள் ளது. இக்கண்காட்சியில் வேளாண்மை மற்  றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய உள்ளூர் ரகங்களைக் காட்சிப் படுத்துவது, வேளாண் பல்கலைக்கழக ரகங்களைக் காட்சிப்படுத்துதல், விவ சாயிகள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவுத் திருவிழா, விவசாயி கள் பயிற்சி, மரபியல் பன்முகத் தன்மை  குறித்துப் பல்கலைக்கழக விஞ்ஞானி களின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

கல்லூரிகளில் நாப்கின் இயந்திரம் பொருத்தக்கோரும் வழக்கு ஒத்திவைப்பு

‘மதுரை, ஜன.23- தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், உயர்கல்வி நிறு வனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க வேண்டும் எனக் கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த  பொழிலன் சென்னை உயர்நீதிமன்றம் மது ரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தி ருந்தார். மனுவில், “கல்லூரி மாணவிகள், மாத விடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகை யில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்  கழகங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்க ளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்தி ரங்களை வைக்க வேண்டும். பயன்படுத் திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வ தற்கான. வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டுமெனக்” கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வு முன் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு மனு வில் கேட்கவில்லை . தென் மாவட்டத்தில்  உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் கேட்டுள் ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மனுதாரர், யுஜிசி தலைவரை யும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை ஒத்தி வைத்தனர்.

குடிநீர் இணைப்பிற்காகக் காத்திருக்கும் 2,300 குடும்பங்கள்

பழநி, ஜன.23- பழனியை அடுத்துள்ள ஆயக்குடி பேரூராட்சியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருப்புகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. சமீ பத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உறுதி யளித்தும் (சுமார் நான்கு மாதங்கள்) பேரூராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் இணைப்பு கேட்டு 2,300 பேர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன் மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி, ஒன்றியச் செயலாளர் பி.செல்வராஜ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி. கௌரி, சி. பெரியசாமி, ஆர்.முருகானந்தம், பி.சின்னச் சாமி, உ.களஞ்சியம், கிளைச் செயலாளர்கள் ஆர்.வேலுச்சாமி, வி. கோபாலகிருஷணன் ஆகியோர் பேரூ ராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்கள், “பேரூராட்சி நிர்வாகம் முறை கேடின்றி விண்ணப்பம் செய்த அனைவருக்கும் காலதாம தம் இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

குடியரசு தினத்தன்று சிவகங்கையில் டிராக்டர் பேரணி

சிவகங்கை, ஜன.23- வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துத் தில்லியில்  நடைபெற்ற போராட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஜன வரி 26-ஆம் தேதி காலை பத்து மணிக்குச் சிவகங்கை ராமச்சந்திரா பூங்காவிலிருந்து அரண்மனை வாசல் வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக டிராக்டர்  மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற உள்ளது.  இந்தத் தகவலை அமைப்பின் மாவட்ட தலைவர் வீர பாண்டி, மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர் தெரி வித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தமிழகம் வந்த அகதிகள்

மதுரை, ஜன.23- இலங்கை கிளிநொச்சியிலிருந்து 75 வயதுடைய பெண் மற்றும் 10 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொண்ட  குடும்பம் ஒன்று திங்கட்கிழமை அதிகாலை இராமேஸ் வரம் வந்தது. பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையிலிருந்து 2023-ஆம் ஆண்டு இராமேஸ்வரம் வந்துள்ள முதல் இலங்கைப் பிரஜைகள் இவர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை படகில் இலங்கையிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர், திங்கள்கிழமை அதிகாலை சேரன்கோட்டை கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் விசா ரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் புகலிடம் தேடி வந்த  இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக அதி கரித்துள்ளது. இவர்களில் ஒரு முதியவர், தனது இலங்கை யிலிருந்து இந்தியா வரும்போது காயமடைந்து இறந்தார்.

பள்ளியருகே வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சின்னாளபட்டி, ஜன.23- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செ.பாறைப்  பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுஞ்சாலை யின் அருகே அமைந்துள்ளது. தற்போது, சாலை நான்கு  வழிச்சாலையாக மாறியுள்ளதால், வாகனங்கள் அதி விரைவாகச் செல்கின்றன. இதனால் மாணவர்கள் சாலை யைக் கடக்கும் போது விபத்துகளில் சிக்கும் சூழல்  உள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளியரு கில் வேகத்தடை அமைக்க வேண்டும். சாலை உயர்ந்து விட்டதால் பள்ளி பள்ளத்திற்குச் சென்றுவிட்டது. பள்  ளிக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டுமென வேண்டுமெனக் கிராமத்தினர் செம்பட்டி நெடுஞ்சாலைப் பிரிவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

நிலக்கோட்டையில்  நாளை மின்தடை

 சின்னாளபட்டி, ஜன.23- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை துணை மின்  நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால் நிலக்கோட்டை துணை மின் நிலையத்தி லிருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணிய காரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கனகோட்டை, கோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 25-ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் மாலை மதியம் இரண்டு மணி வரை  மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின்வாரியச் செயற்பொறியாளர் கருப்பையா தெரி வித்துள்ளார்.

“தனிப்பாதை”: எடப்பாடி பழனிச்சாமி

தேனி, ஜன.23- அதிமுகவின் இடைக் கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி எம்.ஜி.ஆரின் கனவுகளை நனவாக்க கட்சி தனிப் பாதை யை வகுக்கும் என்றார்.  தேனி மாவட்டம் கம் பத்தைச் சேர்ந்த என்.எஸ்.கே.கே.அருண்குமார் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராமராஜ் ஆகியோர் இல்ல திருமண நிகழ்விற்காக வந்திருந்த  எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வரும்  அதிமுக ஒருங்கிணைப்பாள ருமான ஒ.பன்னீர்செல் வத்தை மறைமுகமாக விமர்சித்த அவர்,   “மற்ற வர்கள் எப்படி இருக்கி றார்கள்” என்பதைப் பற்றி  தொண்டர்கள் கவலைப் படத் தேவையில்லை.  நமது பாதை ஒரு தனி பாதையாக வும், நேர்மையான வழியாக வும் இருக்க வேண்டும் என்றார். முதல்வரின் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற அதி முகவின் மூத்த தலைவர் ஒருவர் “தனிப் பாதை” என்ற முன்னாள் முதல்வரின் கருத்துக்கு அதிக முக்கி யத்துவம் கொடுக்கக் கூடாது என்றார். இது  தொண்டர்களை உற்சாகப படுத்துவதற்காக கூறப்பட்ட கருத்து தான். எப்படியும் ஓரிரு நாட்களில் முன்னாள் முதல்வரின் கருத்து தெளி வாகிவிடும் என்றார்.  -தி இந்து இணையதளத்திலிருந்து