தேனி, செப்.13- கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வரு வதை தொடர்ந்து, தேனி மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லை கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தமிழகத்திற்குள் வருபவர் களை சோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் நான்கு நபர்களுக்கு நிபா வைரஸ் பாதித்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள் ளார். இதில் இருவர் இறந் துள்ளனர். மேலும் நிபா வைரஸ் பாதிப்பால் முதலில் இறந்த நபரின் 9 வயதுள்ள மகனும் 24 வயதுள்ள மனை வியின் தம்பிக்கும் நிபா வைரஸ் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் ஆனால் தமிழகத்தில் நிபா வைரஸ் பற்றிய அறி குறிகள் இதுவரை தென்பட வில்லை. தேனி மாவட்டம் தமிழக & கேரள எல்லைப் பகுதி என்பதாலும், நாள் தோறும் தமிழகப் பகுதியிலி ருந்து கூலித்தொழிலா ளர்கள் கேரளாவுக்கு வேலைக்குச் சென்று திரும்பு வதாலும், கேரளாவிலிருந்து ஏராளமானோர் பணி, வியா பாரம் தொடர்பாக தமிழகம் வந்து செல்வதாலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக எல்லைப் பகுதிகளில், மருத்துவக்குழு அமைத்து கேரளாவில் இருந்து தமி ழகத்திற்குள் வருபவர் களுக்கு காய்ச்சல் அறிகுறி உண்டா என சோதனை செய்ய தமிழக சுகாதா ரத்துறை உத்தரவிட்டுள் ளது. இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவின் பேரில், எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் புதன்கிழமை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கம்பம்மெட்டு அடி வாரப் பகுதியில் கேரளா விலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல், உடல் சோர்வு அறிகுறிகள் உள்ளதா என மருத்துவக் குழுவினர் சோதனை செய் கின்றனர். இதுபோல் எல்லைப் பகுதியான கம்பம் மெட்டில் காவல்துறையினர் கேரளாவிலிருந்து தமிழ கத்திற்கு வாகனங்களில் வரு பவர்களிடம் ஊர், பெயர், செல்லும் இடம் குறித்து விசா ரணை செய்து வருகின்ற னர்.