districts

img

திண்டுக்கல்லில் மருத்துவமனை முன்பு உறவினர்கள்- கிராம மக்கள் மறியல்

திண்டுக்கல், மே24 திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது நிலக்கோட்டை பெண் உயிரிழந்ததால் மருத்  துவர்களைக் கண்  டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மனைவி இந்தி ராணி.  திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவ்வாயன்று பிர சவத்திற்காக சேர்க்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு இந்திராணி  உயிரிழந்தார்.  இந்த தகவல் உறவினர்களிடம் தெரி விக்கவில்லை. தன் மனைவி இறந்ததை மருத்துவர்கள் மறைத்துவிட்டனர் என்று  கூறி  கணவர் ஜெயராமன் மற்றும் உறவி னர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின்  மெத்த னப் போக்கைக் கண்டித்து சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடக்கு காவல்துறையினர் மறி யலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனையடுத்து போலீசா ருக்கும் கிராம மக்களுக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து  போலீசார் சமாதானம் செய்தும் போராட் டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். 

வாலிபர் சங்கம் சமரசம் 

இதனையடுத்து மருத்துவர்கள், உற வினர்கள், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்திமனோகரி,  கண்கா ணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, மேற்கு தாசில்தார் அபுல்ரிஜ்வான்,  ஆகியோருடன் வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர். பாலாஜி,  நகரத்தலைவர் ஏ.அஜீத், நக ரச்செயலாளர் எம். பிரேம்குமார், இந்திரா ணியின் கணவர் ஜெயராமன் மற்றும் உற வினர்கள் கலந்து கொண்டனர். குழந்தை  பிறந்த பிறகு  இந்திராணியின் கர்ப்பப்பை யிலிருந்து அதிகமான ரத்தப் போக்கு இருந்த  காரணத்தால் கர்ப்பப்பையை அகற்ற மருத்துவர்கள் முயன்ற போது சிகிச்சை  பலனின்றி இந்திராணி இறந்ததாக மருத்து வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  எனினும்  இந்திராணி இறந்த தகவலை  உரிய முறை யில் கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரி விக்காமல் கவனக்குறைவாக இருந்தது  குறித்து புகார் அளிப்பது என்றும் அதன் மீது உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனை யடுத்து இந்திராணியின் உடலை கணவர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.                               (ந.நி.)