districts

img

பூத்துக்குலுங்கும் செண்டுமல்லி- விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னாளப்பட்டி நவ.24- நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டா ரப்பகுதியில் தொடர்மழை மற்றும் ,இத மான சீதோசன நிலையால் செண்டு மல்லி பூக்கள் பூத்துக் குலுங்கு கின்றன.  திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஓரளவு வறட்சியை தாங்கி  வளரக்கூடிய பூக்கள், பழங்கள்,  காய்கனிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாயி கள் குறுகிய கால பூக்களான வாடா மல்லி, சென்டுமல்லி,கோழி க்கொண்டை போன்ற பூக்களை அதிகளவில் உற் பத்தி செய்துள்ளனர். மேலும் கடந்த வாரம்வரை பெய்த தொடர்மழை மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் குளிர்ச்சியான சீதோசன நிலையால்  இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட் டுள்ள செண்டுமல்லி பூக்கள் பூத்துக்  குலுங்குகின்றன, பூக்களும் வழக் கத்தை விட நல்ல வண்ணத்தில் தெளி வாகவும்,அதிக எடை இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்வதாக விவசாயிகள் மகிழ்ச்சியு  தெரிவித்துள்ளனர்.