தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் அராஜகத்தை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் தாலுகா செயலாளர் எம்.அஜய் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம்.வசந்த் சுர்ஜித், யாழினி சுரேந்தர், கவி, அருண் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.