districts

மாரத்தான் போட்டியில்  நத்தம் மாணவி முதல் பரிசு

நத்தம்,ஜன.16- மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில்  சிறுவர்களுக் கான மராத்தான் போட்டி ஜனவரி 14 அன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவி நேகா முதல்  பரிசு வென்றார். மாணவன் அஸ்வந்த் ஐந்தாவது பரிசு  பெற்றார். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஞானம்  அத்தெலடிக் கிளப் திருக்குமார் மற்றும் மகேந்திரன் ஆகி யோர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.