நத்தம், டிச.5- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அள விலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு செயலர் தலைமை யாசிரியர்கள் திருநாவுக்கரசு, ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், சுவாமி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, ஆனந்தவேல், கற்பகம் உள்ளிட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசி ரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 5 நாட்கள் நடந்த கலைத்திருவிழாவில் வட்டார அள வில் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி உள்பட 38 பள்ளிகள் கலந்துகொண்டன. வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளாதேவி நன்றி கூறினார்.