தேனி, ஏப்.27- டாடா குழும மருந்து கடை களில் விதிகளை மீறி பெயர் பல கையில் ஆங்கிலம் ,இந்தி பெயர் இடம் பெற்றுள்ளதாக தேனி ஆட்சி யரிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது . இது குறித்து சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் இதய நில வன், மாவட்டச் செயலாளர் அய் .தமிழ்மணி, தேனி சீருடையான், சுருளிப்பட்டி சிவாஜி, மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட நிர்வாகி கள் தேனி ஆட்சியர் எஸ்.ஆர்.ஷஜீ வனாவை சந்தித்து புகார் அளித்த னர். அந்த மனுவில் தெரிவித்துள்ள தாவது: டாடா குழுமத்தின் மருந்து விற் பனைப் பிரிவான டாடா ஜெனரிக் என்கிற நிறுவனத்தின் கிளைகளை மாநிலம் முழுக்க பல நகரங்களில் முகவர்கள் வாயிலாகத் திறந்து வருகிறது. உதாரணமாக.தேனி மாவட்டம் கம்பம் நகரில் இக்கிளையினை கணபதி பார்மஸி என்கிற முகவர் கம்பம் நகரில் துவக்கியுள்ளார். இக்கிளையின் பெயர் பலகை யில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பெயர் பொறிக்கப்பட் டுள்ளது. இக்கிளையினைத் துவங்கி யுள்ள கணபதி பார்மஸி என்கிற முக வர் மட்டும் தமிழில் மிகச் சிறியதாக பார்மஸி என்று பொறித்துள்ளார். இதேபோல் தேனி மற்றும் பெரிய குளம் நகரங்களிலும் டாடா குழு மத்தின் இக்கிளைகள் முக வர்கள் மூலமாகத் தொடங்கப்பட்டி ருக்கின்றன. மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் இக்கிளைகள் தொடங்க இருப்பதாகச் செய்தி கள் வருகின்றன.
ஏற்கனவே ஒன்றிய அரசு தமிழ்மொழியை பின்னிக்கிழுத்து ஹிந்தியை முதன்மைப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வந்த பல விடயங்களுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் பின்னர் ஒன்றிய அரசு பின்வாங்குவதும் என நடந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது டாடா குழுமம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்க ளின் வாயிலாக ஹிந்தித் திணிப் பினைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் அல்லது தமிழ்நாட்டு மக்க ளிடம் வியாபாரம் செய்ய விரும்பும் அவர்கள் தமிழர்களின் மொழிக்கு முக்கியத்துவம் தரத் தேவை யில்லை என்ற ஆணவ நோக்கோடு இருக்கிறார்கள் என்றும் அல்லது ஹிந்தி மட்டுமே இந்தியாவிற்கான மொழி என இந்திய இறையாண்மைக்கும் பன்முகத்தன்மைக்கும் எதிராக வும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழியுரிமைக்கு எதிராகவும் அவர்கள் செயல்படு கிறார்கள் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பெயர்ப்பலகையானது தமிழ்நாடு மாநில மொழிக் கொள் கைக்கு எதிரானதாகவும் இருக்கி றது. பெயர்ப் பலகையில் தமிழ் மொழியினை முன்னிலைப்படுத் தும் வகையில் தமிழில் பெய ரினைப் பொறித்திட வேண்டுமென வும். மேலும் தமிழில் அப்பெயர் தமிழிங்கிலீஸில் இல்லாமல் பொருத்தமான தமிழ் மொழியில் இடம் பெற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.