திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளையகவுண்டனூரில் முனியப்பசுவாமி கோவில் திருவிழாவில் வாலிபர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்கு மரம் ஏறினர். இதில் நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சந்தானம் என்ற இளைஞர் மரத்தில் ஏறி உச்சியில் மஞ்சல் துணியில் கட்டி வைத்திருந்த ரொக்கப்பரிசை எடுத்தார். அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.