மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சி மற்றும் ஹோப் தொண்டு நிறுவனம் மூலம் ஆயூஷ்மான்பாரத் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் பதிவுசெய்யும் முகாம் நடைபெற்றது.இதில் பயனாளிளுக்கு மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் காப்பீடு அட்டைகளை வழங்கினார். ஹோப் தொண்டு நிறுவன மேலூர் தாலுகா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.