அணைகளில் நீர்மட்டம்
முல்லைப்பெரியாறு - நீர்மட்டம் 119.05 அடி. வரத்து 310 கன அடி. திறப்பு 511 கன அடி. வைகை அணை - நீர்மட்டம் 47.34 அடி. வரத்து 170 கன அடி. திறப்பு 69 கன அடி. மஞ்சளாறு அணை - நீர்மட்டம் 50.10 அடி. வரத்து, திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை - நீர்மட்டம் 77.96 அடி. வரத்து இல்லை. திறப்பு 3 கன அடி. சண்முகாநதி அணை - நீர்மட்டம் 34.50 வரத்து, திறப்பு இல்லை. மழையளவு (மி.மீ.): மஞ்சளாறு-2.4, உத்தமபாளை யம்-0.8, பெரியாறு அணை -7.4, தேக்கடி - 4.6, சண்முகா நதி அணை -1.4.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்
தேனி, செப்.16- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கலை ஞர் நூற்றாண்டு விழா-2023-ஐ கொண்டாடும் வகையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத் தள அட்டை (UDID Card), வழங்கப்பட்டுள்ளது. 1 நபர்களுக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாழைத்தார் திருடிய இருவர் கைது
தேனி, செப்.16- உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத் தோட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது. அதிலிருந்து சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவ சாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்த னர். அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்ற போது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் காவல்நிலையத்தில் விவசாயிகள் ஒப்படைத்தனர். போலீ சார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வ ரன், சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதிய வன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
பணம், செல்போன் திருட்டு
தேனி, செப்.16- கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் முரு கன் என்பவர் செல்போன் கடை மற்றும் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவர் வியாழனன்று இரவு கடையை அடைத்து விட்டு மறுநாள் வந்து போது, கடையின் கதவு திறந்திருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கல்லா வில் இருந்த ரூ.8,500, பழுது பார்க்க வந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 10 செல்போன் காணாமல் போனது. இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசா பெண் பாலியல் வன்புணர்வு
சிவகங்கை, செப்.17- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி அருகே உள்ள செங்கல் சூளையில் 7 வருடமாக ஒடிசா வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அந்த பெண், கடந்த நான்கு வருடங்களாக இரு குழந்தைகளு டன் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த கீழப்பாசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளி யன்று இரவு குடி போதையில் தெக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆதியின் நண்பர்களான 4 இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை யடுத்து கீழமேல்குடி தெற்கூரை சேர்ந்த 4 இளை ஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், ஏடிஎஸ்பி நமசிவாயம், டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் மானாமதுரை காவல் லையத்தில் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
மூதாட்டியிடம் நகையை பறித்து 2 பேர் கைது
ஒட்டன்சத்திரம், செப்.16- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளி மந்தையம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் உத்தமி (72). இவர், செப்டம்பர் 11 அன்று தனது தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கி லியை பறித்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து கள்ளி மந்தையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், கே.கீரனூர் நால்ரோட்டில் ரோந்து சென்ற காவல்துறையினர் கண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், உத்தமியிடம் நகையை பறித்துச்சென்ற அம்பி ளிக்கையைச் சேர்ந்த நடராஜன் (32), சசிக்குமார் (27) ஆகி யோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, 2 பவுன் நகை, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நத்தத்தில் பெண் தீக்குளிப்பு
நத்தம், செப்.16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி பாண்டியம்மாள் (60). இவர்கள் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியம்மாள் மண்ணெண் ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் நத்தம் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசு வழங்கிய நிலத்தை 43 வருடங்களாக மீட்க முடியாமல் தவிக்கும் பட்டியலின மக்கள்
ஒட்டன்சத்திரம், செப்.16- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூட லிங்கபுரத்தில் 43 வருடங்களுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியும் இதுவரை நிலத்தை மீட்டு தராததை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் 1-ஆவது வார்டுக்கு உட்பட்ட கூடலிங்க புரத்தைச் சேர்ந்த ஏழை, எளிய பட்டியலின மக்கள் 48 பேருக்கு 1981-ஆம் ஆண்டு அருகில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தை தானமாக பெற்று, அரசு மூலம் ஒவ்வொரு நபருக்கும் தலா 5 சென்ட் வீதம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதற் கான வரைவு நகலும் அந்தந்த பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 43 ஆண்டு களாக நிலத்தை மீட்ட தர வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சிய ரிடமும் தொடர்ந்து புகார் அளித்தும் இது வரை பட்டியலின மக்களுக்கு நிலத்தை அரசு வழங்கவில்லை. மேலும் பட்டியலின மக்கள் என்பதால் அந்த நிலத்திற்குள் அவர்கள் செல்ல அனு மதிக்கப்படவில்லை. நிலத்தை மீட்டு தர வில்லை என்றால் தலித் அமைப்புகளு டன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப் படப் போவதாக தெரிவித்துள்ளனர். பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது.\
மகளிர் உரிமை தொகை பயனாளிகள் கடவு சொல் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்
தேனி ஆட்சியர் தகவல் தேனி, செப்.16- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகள் கைபேசி எண்ணிற்கு யாரே னும் கடவுச்சொல் (OTP - One Time Password) கேட்டால் தகவல் பகிர வேண்டாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘விண்ணப்பதாரர் களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் ணிற்கு செப்டம்பர் 18 அன்று முதல் அனுப்பி வைக்கப்படும். தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்க ளின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறை யீடு செய்யலாம். மேல்முறையீடு செய் யும் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சி யர் அளவில் விசாரணை செய்யப்பட்டு, தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். மேலும் முக்கியமாக பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறு வனத்திலிருந்தோ அழைக்கிறோம் என போலியான அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏடிஎம் அட்டை யின் பின்பக்கத்தில் உள்ள மூன்று இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரே னும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம். இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வாங்கி கணக்கிலிருந்து மேற்கண்ட தொகை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விடுபட்டவர்களின் குறைகளை தீர்க்க தாலுகா அளவில் உதவி மையங்கள்
அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, செப்.16- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏதோவொரு காரணத்தால் விடு பட்டவர்களின் குறைகளை தீர்க்க தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மதுரையில் சனிக்கிழமையன்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘கலைஞர் மக ளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உண்மை யான தேவை உடையவர்கள் யாராக இருந் தாலும் விடுபட்டு விடக்கூடாது என்பதே தமி ழக முதல்வரின் நோக்கம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்காத வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. மகளிர் உரிமைத் தொகை பெற முழு தகுதி யிருந்தும் ஏதோவொரு காரணத்தால் விடு பட்டிருந்தால் அவர்களது குறைகளை தீர்ப் பதற்கு ஒரு அமைப்பு முறையை உருவாக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்காதவர்கள், விடுபட்டவர்கள் உதவி மையங்களை அணுகி விண்ணப் பிக்கலாம். உதவி மையங்களின் தொலை பேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தில் ஏழைகள் யாரும் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல் லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் அக்.17 இல் உண்ணாவிரதம்
மதுரை, செப்.16- தமிழ்நாடு நகராட்சி, மாந கராட்சி அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள் ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் மது ரையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கா. முருகானந்தம் தலைமை வகித்தார். நகராட்சி மாநக ராட்சி ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதி யம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத் தில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அலுவலக நேரத் தில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திட வேண்டும். அர சாணை எண் 152 மற்றும் அர சாணை 10ல் விடுபட்ட பணி யிடங்களை வழங்கிட வேண் டும். நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில், செப்டம்பர் 20 அன்று நக ராட்சி நிர்வாக துறை அமைச் சர், நகராட்சி நிர்வாக இயக் குனர், மற்றும் அரசு செயலா ளர் அவர்களை ஒருங்கி ணைப்புக் குழுவின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை களை வலியுறுத்துவது என வும், அக்டோபர் 5 அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும், அக்டோபர் 17 அன்று மண்டல அளவில் உண்ணாவிரதமும், நவம்பர் 15 அன்று மாநில அளவில் காத்திருப்பு போராட்டமும் நடத்த முடிவு எடுக்கப்பட் டுள்ளது.