மதுரை, ஜூன்.15- தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய 5 சதவீத ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை பிடித்தம் செய்ய பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்து அனைத்து செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் மற்றும் முறை யீடு போராட்டம் நடைபெற்றது. மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தீ. ராஜி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ச. சுஜாதா துவக்கி வைத்து பேசினார், மாவட்ட செயலாளர் மு. தாமரைச்செல்வி பேசினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதி ராஜா நிறைவுரையாற்றினார், பரமக்குடி ராமநாதபுரத்தில் மாவட்ட பொருளாளர் சிவ பிரசாத் தலைமையிலும் பரமக்குடியில் மாவட்டத் தலைவர் வினோதினி தலைமை யிலும் துணை இயக்குனர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் எம்ஆர்பி செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை எடுப்பதற்கான அரசாணையை அமல்படுத்து வதாகவும் மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதி யத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், துணை இயக்குனர் உறுதி யளித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெ. சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.