districts

img

மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மேட்டுப்பாளையம், டிச.19- மண் சரிவால் தடைபட்ட மலை ரயில் சேவை, சீரமைப்பு பணிகள் நிறைவடைந் ததால் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை நோக்கி மலை ரயில் சுற்றுலா பயணிகளு டன் புறப்பட்டு சென்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் திலிருந்து குன்னூர் வழியாக உதகைக்கு தின சரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயி லில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடந்த டிச.14 ஆம் தேதி  மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையி லான மலைரயில் பாதையில் 10க்கும் மேற் பட்ட இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பாறைகளும், மரங்களும் சரிந்து மலை ரயிலின் இருப்பு பாதைகள் மண்ணுக் குள் புதைந்து சேதமடைந்தன. இதனைய டுத்து மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் துவங்கின. 30க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் கார ணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக் கப்படும் நீலகிரி மலை ரயில் சேவை தற்காலி கமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஞாயிறன்று மாலை சீர மைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந் தன. இதனயடுத்து திங்களன்று முதல் வழக் கம் போல் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலைரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித் தது. இதனால், கடந்த 5 நாட்களாக தடைப் பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண் டும் துவங்கியது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து திங்களன்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயிலில் சுற் றுலா பயணிகள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர்.